tamilnadu

img

விரைவு பேருந்துகளில் பொங்கல் முன்பதிவு தொடரும்

சென்னை,டிச.14- பொங்கலையொட்டி, அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடர்ந்து நடை பெறும் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட் கிழமை) பொங்கல் பண்டிகை யாகும். இதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. விரைவு பேருந்துகள் பொறுத்தவரை 30 நாட்க ளுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், பொங் கலையொட்டி சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் வெள்ளிக் கிழமை (ஜன.12) பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள் வோருக்காக முன்பதிவு வசதி டிச. 14 முதல் தொடங்கியது. மேலும், சனிக் கிழமை (ஜன.13) பயணம் செய்வோ ருக்கான முன்பதிவு  வியாழக்கிழமை (டிச.14) தொடங்கியது. ஞாயிற்றுக் கிழமை (ஜன.14) பயணிக்க விரும்பு வோருக்கு முன்பதிவு டிச.15 ஆம் தேதி முதல் நடைபெறும். அரசு போக்குவரத்துக் கழகத் தின் இணையதளம் அல்லது செயலி மூலம் பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூல மாகவும் முன்பதிவு செய்யலாம். இதற்கிடையே வரும் 25 ஆம்  தேதி கிறிஸ்துமஸ்க்கு சென்னை யிலிருந்து தென் மாவட்டங்க ளுக்கு பேருந்துகள் பெரும்பாலான இருக்கைகளும் நிரம்பி விட்டன. எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக் கான கூடுதல் பேருந்துகள் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான கூடுதல் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.