tamilnadu

உரிமமின்றி மெத்தனால், எத்தனால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை

உரிமமின்றி மெத்தனால், எத்தனால் விற்பனை செய்தால்  கடும் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை

உதகை, ஜூன் 11– நீலகிரி மாவட்டத்தில் உரிமம் இல்லா மல் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற  ஆபத்தான வேதிப்பொருட்களை விற்பனை  செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மதுவிலக்கு அமலாக் கப் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.  தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதிப் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பல் வேறு கட்ட சோதனைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்ஒரு பகுதியாக, மதுவிலக்கு பிரிவு எஸ்பி உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட் பகுதியில் உதவி ஆய்வாளர்கள் சரவணன், ராஜேஷ் தலைமையிலான குழுவினர் ஹார்டுவேர், பெயிண்ட் விற்பனை கடைகள் மற்றும் வேளாண் மருந்து பொருட்கள் விற்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கடைகளில் உள்ள  இருப்புப் பதிவுகள், கொள்முதல் மற்றும்  விற்பனை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், எத்தனால் மற்றும் மெத்தனால் கையாளப்படும் முறை, சேமித்து வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் உரிய உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்படு கின்றனவா என்பதை கண்டறிய சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வேதிப் பொருட்கள், முறைகேடாக பயன்படுத்தப் பட்டால், கள்ளச்சாராயம் தயாரிக்கவும், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படலாம் என்ப தால் இந்த சோதனை நடத்தப்படுகிறது. தின சரி 20 கடைகள் என இதுவரை 100 கடை கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. உரிமம் வாங்கி மெத்தனால் விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களின் விவரங்கள் பரா மரிக்கப்பட வேண்டும். இதுவரை சட்ட விரோத மெத்தனால் இருப்பு விவரம் கண்ட றியப்படவில்லை.” “எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகிய வற்றை உரிமம் இன்றி கள்ளத்தனமாக வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் உள் ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு அல்லது அரு கில் உள்ள காவல் நிலையத்தில் தக வல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்ப வர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்றனர்.