காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் மற்றும் தோழர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே வெள்ளியன்று (பிப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், இ.சங்கர், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன், ஆர்.சௌந்தரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.