tamilnadu

img

இழப்பீடு வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி நான்கு வழிச்சாலை பணி

கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலங்களையும், வீடுகளையும் அரசு கையகப்படுத்தியது. இந்நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்துள்ளது. பட்டா நிலம், தரிசு நிலம், ஆதீன நிலம் என எந்த நிலத்தில் குடியிருந்தாலும் அதற்கான இழப்பீட்டையும், மாற்று ஏற்பாட்டையும் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து போராடி வருகிறது.  இப்போராட்டத்தின் விளைவாக சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உரிய இழப்பீடு வழங்கிய பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை (டிச.12) காலை உரிய இழப்பீடு வழங்காமல் காவல்துறையினரை குவித்து வைத்து மிரட்டி, கைது செய்து சாலைப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை சரியான அணுகுமுறையல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வீடுகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கிய பின்னரே பணிகளை துவக்கிட வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, டிச.12 -  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நிலங்களை அபகரித்து, அப்பாவி ஏழைகளை அடித்து விரட்டி நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள வந்ததை தடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை தாக்கி கைது செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டவிதிகளை மீறி, சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, விவசாயி களை மிரட்டி விளைநிலங்களை அப கரித்து, விழுப்புரம் முதல் நாகப்பட்டி னம் வரை 179 கிலோமீட்டர் தொலை வுக்கு 4,400 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட நான்கு வழிச்சாலைப் பணிக்கு (ஒரு கி.மீட்டருக்கு ரூ.40 கோடி) தற்போது கூடுதலாக பல ஆயி ரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 இல் சொற்பவிலைக்கு வாங்கிய விவசாய நிலங்களை அழித்து, அப்பாவி ஏழைகளின் குடி யிருப்புகளை மிரட்டி அகற்றிவிட்டு, அவ்வழியாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான அடிப்படை வேலைகள் துவங்கின. விவசாயி களின் எதிர்ப்பையும் மீறி, சாலை அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.  நிலங்களை அபகரித்து கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு கொடுப்ப தற்காக, விவசாயிகளை மிகவும் அவ மரியாதையாக அதிகாரிகள் நடத்துவ தாக ஆரம்பம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வரு கின்றனர். 

சட்டவிரோதமாக பணிகள்

சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டு விழுப்புரம் முதல் புதுச்சேரி, புதுச் சேரி முதல் பூண்டியாக்குப்பம், பூண்டி யாக்குப்பம் முதல் சட்டநாதபுரம், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் என நான்கு பகுதியாக பிரித்து சட்ட விரோதமாக பணிகளை செய்ய துவங்கி யுள்ளனர். இதில், கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரையிலான என்.ஹெச்.45ஏ (NH 45A) சாலை பணிக்கு விவசாயிகளின் விளைநிலங்கள் மிரட்டி வாங்கப்பட்டன. குறிப்பாக கொள்ளி டம், சட்டநாதபுரம், கோபாலசமுத்தி ரம், புத்தூர், எருக்கூர், விளந்திடசமுத்தி ரம், தடாளன்கோவில் பகுதி, செங்கல் மேடு, காத்திருப்பு, நாங்கூர், செம்பத னிருப்பு, அல்லிவிளாகம், இராதா நல்லூர், ஆலங்காடு, சங்கிருப்பு, பூந்தாழை, மாமாகுடி, ஆக்கூர், பண்டா ரவடை, ஸ்ரீநகர், நடராஜன் பிள்ளைசாவடி,           அன்னப்பன்பேட்டை,  திருக்கடையூர், சிங்கானோடை, காழியப்பநல்லூர், அனந்தமங்கலம், பொறையார் வழியாக அமைக்கப் படும் நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி யில் மட்டும், பல லட்சம் ஏக்கர் நிலங் களை மிரட்டியும், வலுக்கட்டாய மாகவும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியது அரசு. 

ஆரம்பக் கட்டத்தில் இச்சாலைக் காக எதிர்ப்பு தெரிவித்த பல விவசாயி கள், அரசின் அடக்குமுறை, மிரட்டல் போக்கால், வேறு வழியின்றி தங்களது வாழ்வாதாரமான விளைநிலங்களை விருப்பமின்றி அரசிடம் ஒப்படைத் தனர். சட்டநாதபுரம் முதல் நாகை வரை யிலான 56 கி.மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப் பட வேண்டிய நிலங்களுக்கான இழப்பீடுகள் மிகச் சொற்பமாக வழங்கப் பட்டன. சதுர அடி 800 ரூபாயிலிருந்து, ரூ.1000 வரை விற்பனையாகும் சூழ லில், வெறும் 3 ரூபாயிலிருந்து 11 ரூபாய் வரை மட்டுமே வழங்கியுள்ளது.  தங்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டு மிக சொற்பமான தொகை வழங்குவதை ஏற்க முடியாது என விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கட்டுமான ஒப்பந்த நிறுவன மும், நகாய் அதிகாரிகளும் இதனை சற்றும் கண்டு கொள்ளவில்லை. விவ சாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத்தின் குரலை வழிமொழியக் கூடியவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  மேலும் சாலை அமைய வுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு களுக்கும் உரிய இழப்பீடு வழங்காமல் அடாவடித்தனமாக வீடுகளை இடித்த னர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், மேல்முறையீட்டையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணியை,   நகாய் அதிகாரி களின் துணையோடு கட்டுமான நிறு வனம் படுவேகமாக செய்துவருகிறது. 

விவசாயிகள்  தொடர் போராட்டம்

இத்தகைய அராஜகப் போக்கை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெயில், மழை, இரவு,  பகல் என பாராமல் தொடர் போராட்டங் களை ஒவ்வொரு பகுதிகளிலும் இரவு-பகலாக நடத்தின. ஆனால், அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் எடுக்கப்படும் முடிவுகளை, மாவட்ட நிர்வாகம் காற்றில் பறக்க விட்டு, ஒப்பந்த நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், திருக்கடையூர் அருகேயுள்ள வெள்ளக்குளம், காலக் கட்டளை பகுதியில் நான்கு வழிச்சாலை யால் நிலங்களை இழந்த விவசாயி களும், குடியிருப்புகளை இழந்த ஏழை களும், “எங்களுக்கு உரிய இழப்பீட்டை தந்துவிட்டு பணியை மேற்கொள்ளுங் கள்” என தொடர்ந்து போராடி வரு கின்றனர்.

மரங்களை வெட்டி,  நிலங்கள் அபகரிப்பு

இச்சூழலில், மாதத்திற்கு ஒரு முறை ஜேசிபி இயந்திரங்கள், நூற்றுக் கணக்கான காவல் படை, வருவாய் துறை அதிகாரிகள் குடிசைகள், நிலங் களில் உள்ள வேலிகள், மரங்களை அகற்ற வருவதும், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயச் சங்கத்தினர், பாதிக் கப்படும் மக்கள் அதை தடுத்து நிறுத்து வதும், அதைத் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை என்று ஒன்றை கூட்டு வதும் வாடிக்கையாகிவிட்டது.  இந்நிலையில், இதுவரை எந்த இழப்பீடும் விவசாயிகளுக்கு வழங்கா மல் திங்கட்கிழமை வழக்கம்போல், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையை வாகனங்களுடன் வர வழைத்து, ஜேசிபி இயந்திரங்களு டன் நகாய் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், அடியாட்களுடன் வந்த  ஒப்பந்த நிறுவனத்தினர் நிலங்களுக் குள் புகுந்து மரங்களை அழித்தனர். இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழ்வா சகம், அபிஷேகக்கட்டளை பரமசிவம், டி.மணல்மேடு உதயக்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூலி  தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அராஜகமான முறையில் நடைபெறும்  சாலை பணியை தடுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இழப்பீடு வழங்காமல் பணியை  செய்யக்கூடாது என வற்புறுத்தியதை யெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறையினர் தலைவர்களையும், விவசாயிகளையும், பெண்களையும் தாக்கி கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். பின்னர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களுடன் ஜேசிபி எந்திரங்களை வைத்து  மரங்களை வெட்டி வீழ்த்தி நிலங்களை அபகரித்தனர். விவசாயிகளுக்கு ஆதர வாக போராடிய  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை கைதுசெய்த மாவட்ட காவல்துறையையும், மக்களின் நியாயமான பிரச்சனைகளை கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 

போலீஸ் தாக்குதல்

திருக்கடையூரில் கட்சியின் செம் பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடந்த  மறியல் போராட்டத்திற்குள் நுழைந்த ஆய்வாளர் அண்ணாதுரை, போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கைது செய்த தோடு, ஒன்றியச் செயலாளர் மார்க்ஸை  கடுமையாக தாக்கினார். மயிலாடுதுறையில் ஒன்றியச் செய லாளர் டி.ஜி.ரவி தலைமையிலும், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அரு கில் ஒன்றியச் செயலாளர் அசோகன் தலைமையிலும், குத்தாலம், பெரம்பூர் பகுதிகளில் ஒன்றியச் செயலாளர் விஜயகாந்த் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. கொள்ளி டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடை வீதியில் சிபிஎம், விவசாயிகள் சங்கம்,  வாலிபர் சங்கம், விவசாயத் தொழிலா ளர் சங்கங்கள் பங்கேற்ற மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும், திருக்கடையூர் பகுதியில் காலங்காலமாக விவசாயம் செய்து  வந்த பெரும்பாலான நிலங்களுக் குரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு தராமல், மாவட்ட ஆட்சியர் தருமபுரம் ஆதீனத்திற்கு இழப்பீட்டை பெற்றுத் தந்துள்ளார் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.          (ந.நி.)