சென்னை, செப்.19- பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமான வர். தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே, விலை உயர்ந்த தனது இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சி புரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்று தனது வாகனத்தில் ‘வீலீங்’ செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை யோர தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வாசன் படுகாயமடைந் தார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கவச உடை அணிந் திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் துறையி னர் வாசன் மீது வாகனத்தை அஜாக் கிரதையாக ஓட்டுதல், பிறர் பாது காப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்கு வரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிழமை (செப்.19) வாசனை காவல் துறையினர் கைது செய்தனர்.