tamilnadu

img

வாகைக்குளத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்

அருப்புக்கோட்டை, மார்ச் 21- அருப்புக்கோட்டை அருகே வாகைக் குளம் கிராமத்தில் பொது மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ள அரசு மதுபானக் கடையை  அகற்றக் கோரி மார்ச் 21 செவ்வாய்க் கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடையை அகற்ற முன்வராத மாவட்ட நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோரை போலீசாரை ஏவி கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை வட்டம்,  திருச்சுழி ஒன்றியத் திற்கு உட்பட்டது வாகைக் குளம் கிராமம். இப்பகுதி  சமூகப்பதற்றம் நிறைந்த வையாகும். எனவே காவல்துறையால் தொடர்ந்து பல வழக்குகள் பதியப் பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அரசு மதுபானக் கடை அமைத்திட ஏற்பாடு நடைபெற்றது.

இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் மேலாளர் இணைந்து விடாப்பிடியாக பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறந்திட பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் டாஸ்மாக் மேலா ளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மேலும் கடை யின் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. “பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்தால்,  அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது“  என தமிழக அரசு ஏற்கனவே வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் அதையும் மீறி அதே இடத்தில் டாஸ்மாக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.   இந்நிலையில் வாகைக்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அருப்புக்கோட்டையில் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வட்டாட்சியர் அறிவழ கன் மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுரு கன் ஆகியோர்,  போராட்டத்தில் ஈடுபட் டோருடன் சமாதானப்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதற்கான எவ்வித வாக்குறுதியையும் தரவில்லை. இத னால், தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், அங்கு சமையல் செய்வதற்காக பாத்திரங்கள், தண்ணீர், காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த துணை  காவல் கண்காணிப்பாளர், அனை வரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டோ ரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். முன்னதாக நடைபெற்ற இப்போரா ட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் மார்க்கண்டேயன், அருப்புக்கோட்டை நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து ஆகி யோர் தலைமை தாங்கினர்.  மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தெய்வா னை,  மாவட்ட செயலாளர் என் .உமா மகே ஸ்வரி,  மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன்,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.தாமஸ், வி.முருகன், எம்.  முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் கண்டன உரை யாற்றினார். மேலும் இதில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, பி.அன்புச்செல்வன், எம். ஜெயபாரத் மற்றும் சுரேஷ்குமார், ஞானதாஸ் , செல்வராணி, ஏஞ்சல் உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.