திருநெல்வேலி,செப்.24- நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை செப்டம்பர் 24 ஞாயிறன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங் களில் 50 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரு கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஞாயிறன்று தொடங்கி வைத்தார். நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமையன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தென்னக ரயில்வே பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் முரு கேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஞாயிறன்று பயணிகள் பயணம் செய்ய அனு மதிக்கப்படவில்லை. இந்த ரயில் கோவில் பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமி டங்கள் நின்று சென்றது அந்தந்த ரயில் நிலை யத்தில் ரயில்வே ஊழியர்கள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரயிலின் வழக்கமான சேவையானது திங்கட்கிழமை சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை வந்தே பாரத் ரயில் பரா மரிப்பு பணிக்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.பின்னர் நெல்லையில் இருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு தனது முதல் பய ணத்தை தொடங்குகிறது. நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும்.