tamilnadu

img

மேல்முறையீடு செய்யுங்கள் ; நிச்சயம் தீர்வு காண்போம்

அரசு வேலையில் உள்ளவர்கள், வங்கியில் நிரந்தரமாக பணம் வருபவர்கள், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்தைவிட அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வராது. ஒரு சிலர் குடும்ப அட்டையில் தாய்-தந்தை ஒரு மாவட்டத்திலும், மகன் வெளி மாநிலத்திலும் இருப்பார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் என்றால், மகளிர் உரிமைத் தொகை வராது. முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை வாங்குபவர்களின் குடும்பத்தில் மருமகளோ, பெண்ணோ இருந்தால் மகளிர் உரிமைத் தொகை வந்து விடும். இவர்கள் இன்னொரு உதவித்தொகை பெற முடியாது.  இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருப் பது ஓடிபி பிரச்சனையால்தான். முதல் நாள்தான் இ-சேவை மையத்தில் காத்திருக்கும் நிலை இருந்தது. அதன்பின் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு முகாம்கள்  வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன.

அதுவும் முறையாக நடைபெறுகிறது. அனைத்து இ-சேவை மையங்களும் பரபரப்பாக உள்ளன.  மகளிர் உரிமைத் தொகை மேல்முறை யீட்டுக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கியில் பணம் பிடித்தால் ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுக்கப்படும்.  குறைவான ஊதியம் வாங்குபவர் களுக்கு ரூ.2 லட்சம் ஊதியம் வருகிறது என்று குறுந்தகவல் வருகிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். நானே நிறைய பார்த்துள்ளேன். அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பின், மகளிர் உரிமைத் தொகை வந்துவிடும். பதிவு செய்யாதவர்களுக்கும் பணம்  செல்கிறது. அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் 30 நாள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் கணக்கில் பணம் வரவு வைக்கப் பட்டது என்று குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால் வேறு ஒரு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் சரி செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகை வழங்குவது என்பது மிகப்பெரிய திட்டம். இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது சில குளறுபடிகள் நேரத்தான் செய்யும். இதற்கு தமிழக முதல்வர் நேரம் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக மேல்முறையீடு செய்யலாம். மகளிர் உரிமைத் தொகை தேவை உள்ள வர்களுக்கு வழங்கப்படுகிறது.