சென்னை, பிப். 10 - செய்திகளுக்கு உயிர் கொடுப்ப வை புகைப்படங்கள் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ எனும் தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி வெள்ளியன்று (பிப்.10) லலித்கலா அகாடெமியில் தொடங்கியது. இந்த கண்காட்சியை திறந்து வைத்து, புகைப்படக் காட்சி தொகுப்பு புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட, இந்து குழும இயக்கு நர் என்.ராம் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், “கலைஞர் கருணாநிதி முதன்முறை யாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இந்த கண்காட்சி தொடங்கி யுள்ளது” என்றார். “செய்திகளை படித்து அறிந்து கொள்வதை விட, புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்து கொள்ளும் நிலை உள்ளது. பேனா விற்கு உள்ள சக்தி புகைப்படத்திற்கும் உள்ளது. நான் சொல்கிற பேனா, எந்த பேனா என்று தெரியும். புகைப்படங் களை எல்லோராலும் சுலபமாக எடுக்க முடியாது. அதற்கென்று பயிற்சிபெற்ற நிபுணர்களாக, உணர்வோடு இருந்தால்தான் எடுக்க முடியும். சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வீட்டுமனை குறித்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். என்.ராம் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து பேசிய இந்து குழும இயக்குநர் என்.ராம், “தமிழ்நாட்டில் அரசு சிறந்த முறையில், கூடுதல் வலிமையோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஒன்றிய அரசை பத்திரிகையாளர்கள் விமர்சித்தால், பல மாநில அரசுகள் வெறுப்படைந்து, நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சனங்கள், பாராட்டுக்களை வித்தியாசம் பார்க்காமல், கோபம், வெறுப்பு கொள்ளாமல் கூர்ந்து கவனித்து செயல்படுகிறார். இது தொடர வேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றில் லாமல், உண்மையை சொல்ல வேண்டும்” என்றார். முன்னதாக இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “நாணயத்தின் ஒரு பக்கம் செய்தியாளர்கள் என்றால் மறு பக்கம் புகைப்படக் கலைஞர்கள். செய்திகளுக்கு உயிர் கொடுப்பவை யாக புகைப்படங்கள் உள்ளன. ஆயிரம் துப்பாக்கி முனைகளை விட ஒரு பேனா முனை வலிமையானது என்றார் வால்டேர். ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் பத்திரிகை யாளர்களை அரவணைப்பதில் முதலமைச்சர் முதன்மையானவராக உள்ளார்.” என்றார். இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் வேல் முருகன், சங்கத்தின் தலைவர் ேஜாதிராமலிங்கம், பொதுச்செயலா ளர் எல்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி பிப்.15ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வை யாளர்கள் இலவசமாக பார்வையிட லாம்.