tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

விரைவில் ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி!

கூகுள் நிறுவனத்தின் செயற் கை நுண்ணறிவு செயலி யான ஜெமினியில் (Gemini) விரைவில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்ய  உள்ளதாக அந்நிறுவனம் தெரி வித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர் கள், ஏஐ மூலம் உருவாக்கிய புகைப் படங்களையும், மொபைலில் எடுக்கப் பட்ட புகைப்படங்களையும் எடிட் செய்துகொள்ளலாம். புகைப்படத்தில் பேக்ரௌண்ட் (Background) மாற்றம், ஒரு பொருளை நீக்கி வேறொரு பொருளை சேர்க்கும் அம்சம் உள் ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் எடிட் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது.  அதுமட்டுமின்றி, ஜெமினி ஏஐ மூலம் எடிட் செய்யப்படும் புகைப் படங்கள் தவறாக பயன்படுத்தப்படு வதை தடுக்கும் நோக்கில், அப்புகைப் படங்களில் மனித கண்களால் பார்க்க  முடியாத டிஜிட்டல் வாட்டர்மார்க் (watermark) சேர்க்கப்படும் என்றும், கூடுதலாக, வெளிப்படைத்தன்மை யை மேலும் மேம்படுத்த அனை வரும் பார்க்கக்கூடிய வகையில் வாட் டர்மார்க் சேர்ப்பது குறித்த சோதனை செய்து வருவதாகவும் கூகுள் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் வரும் வாரங்களில் படிப்படியாக பயனர்கள் பயன்பாட்டிற்கு 45க்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்கப்பட உள்ளது.

ஒரே ஆண்டில் பிளே ஸ்டோரில் இருந்து 47% செயலிகள் நீக்கம்!

கடந்த 2024-இல் இருந்து 2025 வரை பிளே ஸ்டோ ரில் இருந்து பாதுகாப்பு குறைபாடு காரணமாக 47% செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆப்ஃபிகர்ஸ் (APPfigures) என்ற பகுப்பாய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, கூகுள் பிளே ஸ்டோரில் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார்  3.4 மில்லியன் செயலிகள் இருந்துள்ளன. இதுவே 2025-இல் 1.8 மில்லியனாக சரிந்துள்ளது. இதன்மூலம் பிளே ஸ்டோரில் இருந்து கிட்டத்தட்ட 47% செயலி கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஆப் டெவலப்பர் வெரிஃபிக்கேஷனையும் செயல் படுத்தி வருகிறது. புதிய டெவலப்பர் கணக்குகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளது. கூகுள் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2.36 மில்லியன் செயலிகளை, கொள்கை  மீறல் காரணத்திற்காக தடை செய்துள்ளது. இதன் விளை வாக அந்த ஆண்டில் 1,58,000க்கும் மேற்பட்ட டெவ லப்பர் கணக்குகளும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆப்பிள் நிறுவனத் தின் ஆப் ஸ்டோரில் கடந்த ஆண்டு 1.6 மில்லியனாக இருந்த செயலிகளின் எண்ணிக்கை, 2025-இல் 1.64 மில்லியனாக அதிகரித்துள்ளது.

விரைவில் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடி இந்தியாவில் அறிமுகம்!

மெட்டா நிறுவனம், அதன் ரே-பான் (Ray-Ban) ஸ்மார்ட் கண் கண்ணாடி விரைவில் இந்தியாவில் அறிமுகப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தில் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப் பட்டது. முதலில், இது ஐரோப்பா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இதனை இந்தியாவில் அறிமுகப் படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் 1080p வீடியோக்கள் படமாக்கக் கூடிய 12 மெகாபிக்சல் கேமராவும், ஒப்பன் இயர் ஸ்பீக்கர்க ளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கண்ணாடி, பயனர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், நேரடியாக மொழிபெயர்க்கவும், பாடல்களை இயக்கவும், தகவல்களை அனுப்பவும் பயன்படுகின்றது.