சென்னை, பிப். 23- சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் அகாதமியில் நாசிசம் குறித்த புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா புதனன்று (பிப். 22) நடைபெற்றது. ரஷ்யாவின் ராணுவ வரலாற்றின் மிகப்பெரிய அருங்காட்சியகமான "விக்டரி மியூசியம்" (மாஸ்கோ) சார்பில் இந்த புகைப்படக் கண்காட்சியானது நாசிசம் என்ற தலைப்பில் நடை பெறுகிறது. இந்த கண்காட்சியை சென்னையில் உள்ள ரஷ்ய தூதர் ஒலெக் அவ்தீவ், தி இந்து குழுமத்தின் நிர்வாகி என்.ராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒலெக் அவ்தீவ் பேசுகையில், உக்ரைனில் நாசிசம் மற்றும் தேசியவாத கருத்துக்கள் படிப்படியாக உருவாக்கப்பட்ட தன்மையை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்துகிறது என்றார். என்.ராம் பேசுகையில், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்கத்திய ஊடகங்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் இந்திய அரசோ இந்த பிரச்சனையில் நடுநிலைமை வகிக்கிறது. உக்ரைன்‘ ரஷ்யா இடையே மோதல் முடிவக்கு வரவேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறது. முன்னாள் சோவியத் யூனியன். உக்ரைன் மற்றும் நவீன ரஷ்யா குறித்து நான் நன்கு அறிந்திருந்தாலும் இந்த கண்காட்சியில் நான் பார்த்த விஷயங்கள் புதிதாக உள்ளது என்றார். பாசிசத்தின் ஆபத்தை உணர்த்தும் இந்த கண்காட்சி வரும் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.