வேலூர், ஜூலை 22- உயிர் காக்கும் மருந்து பொருட்களின் விலை நிர்ணயத்தில் ஒன்றிய பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலை வர்கள் குற்றம் சாட்டினர். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூ ரில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநில தலைவர் பி.சத்தியநாரா யணன் தலைமை தாங்கி னார். அகில இந்திய பொதுச் செயலாளர் சாந்தனு சாட்டர்ஜி, சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலா ளர் எஸ்.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.விவேகானந்தன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் நாகராஜன் வரவு-செலவு அறிக்கையையும் முன் வைத்தனர்.
வரவேற்புக் குழு புரவலர் மரு.கே.சதீஷ்குமார், இந்திய மருத்துவர்கள் சங்க வேலூர் கிளைத் தலைவர் மரு. டி. நைலேஷ், மருந்து விற்பனை ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் பாஸ்க ரன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட பொதுச்செயலாளர் எஸ்.ராமன், சிஐடியு மாநிக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச் சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தின் 60வது ஆண்டையொட்டி நடை பெற்ற கருத்தரங்கில் அகில இந்திய தலைவர் ரமேஷ் சுந்தர் கருத்துரையாற்றி னார். பொதுக்குழு கூட்டத் திற்கு பிறகு மாநிலத் தலைவர் பி.சத்யநாராய ணன், அகில இந்திய தலை வர் ரமேஷ் சுந்தர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த னர். அப்போது, “மருந்து பொருட்களுக்கு 12 விழுக் காடு ஜிஎஸ்டி வரி விதிக்கின் றனர். இதனால் ஏழை,எளிய மக்கள் நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். எனவே, ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்” என்றனர். ஒரு மருந்துக்கு பல்வேறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வேறுபாட்டை களைந்து ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் விற் கப்படும் மருந்து நோயாளி யின் நோய்க்கு தீர்வளிக் குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.
ஒரு நோயாளி மருந்தை தவறாக உட்கொண்டால் உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் நோயாளி குறித்த தகவல் களை பாதுகாக்க உத்தர வாதம் இல்லாத நிலை யில் ஆன்லைன் மருந்து விற்பனையை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தில் மருந்துகளின் விலை குறைவாகவும் பிற இடங்களில் விலை அதிகமாகவும் உள்ள தாக புகார் எழுகிறது. ஆனால், மக்கள் மருந்தகத் தில் விற்கப்படும் மருந்து தரமானதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏன் என்றால், சமீபத்தில் இந்திய மருந்தக தர கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் ெஜனரிக் மருந்துகள் தயாரிக்கும் 17 நிறுவனங்களின் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அளவை விட குறைவா னது என்று கண்டறிந்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட் டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மருந்து பொருட்களின் விலை நிர்ணயத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஒருபுறம் மக்கள் மருந்தகத்தில் விலை குறைவாகவும், மற்றொருபுறம் முதலாளி களின் லாப நோக்கத்திற் காக விலையை அதிகமாகவும் மருந்து பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கி றது. எனவே மருந்து பொருட் களின் விலை கட்டுப்படுத்த மருந்து பொருள் விலைக் கொள்கையில் ஒன்றிய அரசு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.