விழுப்புரம்,ஏப்.5- விழுப்புரம் மாவட்டம் பெரிய கொழுவாரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தைதிறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுகளை பயனாளிகளிடம் வழங்கினார். வானூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பெரியகொழு வாரி கிராமத்தில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளன. இதனை செவ்வா யன்று (ஏப்.5) முதல்வர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். முன்னதாக சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் சமத்துவபுரம் வீடு களை பயனாளிகளிடம் ஒப்ப டைக்கும் வகையில் ஒருவருக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார். மேலும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டிடம், அன்னியூர் ஊராட்சி அலுவலகக் கட்டிடம், காணை ஊராட்சி அலுவ லகக் கட்டிடம், சி.என்.பாளையம் ஊராட்சி அலுவலகக் கட்டிடம்,
கஞ்சனூர் ஊராட்சியில் தானிய கிடங்கு, ஆசாரங்குப்பம் ஊராட்சி அலுவலகக் கட்டிடம். தென்னமாதேவி ஊராட்சி அலுவலகக் கட்டடம், கோலிய னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டிடம் என மொத்தம் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியி யல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பால் வளத்துறை, தாட்கோ, கூட்டுறவுத் துறை, தொழில் வணிகத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறை களின் சார்பில் மொத்தம் 42,69,98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10,722 பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கள் பொன்முடி, பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.