மதுரை, அக்.30- மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பெரியார் பேருந்து நிலைய பணிகள் முடிவுற்று பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள் ளது. இந்நிலையில் மேல வாசல் பகுதியில் தீய ணைப்பு நிலையம் அருகில் நீண்ட காலமாக சாலை சீர மைக்கப்படாமல் இருந்தது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் சம்பந்தப்பட்ட அதிகரிகளை தொடர்பு கொண்டு சாலையை சீர மைக்க உடனடியாக நட வடிக்கை எடுக்க ஞாயி றன்று உத்தவிட்டார் அத னைத்தொடர்ந்து அதிகாரி கள் சில மணி நேரத்தில் சாலையை சீரமைப்பதற் கான பணிகளை மேற்கொண் டனர். சாலை சீரமைக்கும் பணியினை துணை மேயர் தி.நாகராஜன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.