மதுரை, ஜூலை 24- மதுரை, இராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஏழு அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாவட்டத் தலை வர் பி.வீரமணி, செயலாளர் ஆ. பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.பாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்தி ரன், மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் மு.ராஜ்குமார், நாகூர் கனி, சீனிவாசன், முகமது சுல்தான், நாகேந்திரன், ராஜேஷ், ஐஸ் வர்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “தொகுப்பூ தியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அலுவல கங்களில் காது கேளாதோர்- வாய் பேசதோர் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் மொழி பெயர்ப்பாளர் நியமிக்க வேண் டும்” என வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன.