tamilnadu

மதமோதல் தடுப்பு பிரிவு : மக்கள் ஒற்றுமை மேடை வரவேற்பு!

சென்னை,மார்ச் 15- தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட  இதர மாவட்டங்களில் மதமோதல் களை தவிர்க்கும் வகையில் ‘மதமோதல் தடுப்பு பிரிவு’ உருவாக் கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதை மக்கள் ஒற்றுமை மேடை வரவேற்றுள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கர்ணன் தலைமையில் இணையவழியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:- தமிழ்நாடு ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், மத மோதல்களைத் தடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளார்.  அவற்றைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது, கோவை மாவட்டம் உள்ளிட்டு  இதர மாவட்டங்களிலும்  மதமோதல் தடுப்பு பிரிவு உருவாக் கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் மதவெறி சக்திகள் மக்களைப் பிளந்து மோத விட்டு அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிற வேலைகள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் இத்தகைய பிரிவு  அமைக்கப்படுவது அவசர, அவசிய மானது. அரசின் இந்த முன்னெடுப்புக் களை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வரவேற்கிறது. விரைவில் இந்தப் பிரிவு மாவட்டந்தோறும் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. மதமோதல் என்பது சட்டம் -ஒழுங்கு பிரச்சனையோடு, சமூக  ஒழுங்கு பிரச்சனையும் கூட. ஆகவே, இந்தப் பிரிவை அமைப்பதோடு  மத நல்லிணக்கத்தில் ஆர்வமும், அக்கறையும் உள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் ஆலோசனை களையும், உதவிகளையும் பெற வேண்டியதும் மிகுந்த தேவையா கும். காவல்துறையின் கண்காணிப்பும்,  சிவில் சமூகத்தின் ஈடுபாடும் இணை யும் போது மதவெறி சக்திகளின் பிரச்சார மும், செயல்களும் செல்லாக் காசாகிப் போகும். இதற்கும் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் உரிய முடி வினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.