தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிறன்று காலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி நகர்ப்பகுதியிலும் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கோடை காலத்திற்கு முன்பே வெயில் கொளுத்தி வந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதில் குடிநீர் பிரச்சனை தலை தூக்கியது. இந்நிலையில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக தூத்துக்குடி நகரில் ஞாயிறன்று காலை திடீரென மிதமான மழை பெய்தது. காலை 11.30 மணியளவில் தூறலாக ஆரம் பித்த மழை நேரம் செல்ல செல்ல நன்றாக பெய்தது. இது போல் அவ்வப்போது மழை பெய்தால் தான் வெயிலில் இருந்து தப்பிக்க முடியும் மேலும் குடிநீர் பிரச்சனை தீரும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.