tamilnadu

img

கனமழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து பொதுமக்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடமலைக்குண்டு,ஏப்.30- தேனி மாவட்டம், கடமலை-மயிலை  ஒன்றியத்தில் கடந்த இரண்டு மாதங்களாக  வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப் பட்டது. இதனால் பகல் நேரங்களில் பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதே போல கடும் வெயில் கார ணமாக மலைப்பகுதியில் உள்ள மரம், புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்பட்டன. இதனால் பஞ்சம்தாங்கி,  மேகமலை ஆகிய மலைப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு வந்தது. இதே  போல வெயில் தாக்கம் காரணமாக விவ சாயமும் பாதிப்படைந்து வந்தது.  இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் தணிந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூல  வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளி மலை வனப்பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அதன்காரண மாக  மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்  பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதே போல மேகமலை வனப்பகுதியில் பெய்த  கனமழையின் காரணமாக சின்னசுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆறு மற்றும் சின்னசுருளி அருவி யில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதே போல மலையின் காரணமாக வனப்பகுதி செழிப்படைந்து காட்டு தீ அபா யம் நீங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்க ளாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்  போது பெய்து வரும் மழையால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்  துள்ளனர்.