கன்னியாகுமரி மாவட்டம் சுனாமியையும் பல புயல்களையும் சந்தித்த மாவட்டம். ஆனால், சுமார் 30 மணி நேரத்தில் விட்டுவிட்டும் தொடர்ச்சியாகவும் பெய்த மழையில் நாகர்கோவில் மாநகராட்சியின் ஒருபகுதி மாவட்டத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு வெள் ளத்தில் தத்தளிக்கிறது. சென்னையில் அண்மை யில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போல் நாகர்கோவில் மாநக ராட்சி பகுதிகளான ஊட்டுவாழ் மடம், வசந்த் நகர், இலுப்படி காலனி, மேல்கருப்புக் கோட்டை பகுதிகளில் சுமார் 4000 வீடுகள் வெள்ளத்தில் சிக்கின. இதற்கு நீர்வடி பாதை கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். வசந்த் நகர் குடியிருப்போர் சங்க தலைவர் தருணதாஸ் கூறு கையில், இந்த பகுதியில் 3 நீர் வடிகால்கள் இருந்தன. விவ சாய நிலங்களை வீட்டுமனை களாக்கி அந்த கால்வாய்க ளையும் சேர்த்து விற்று காசாக்கி விட்டார்கள். குமரி அணைக்கு வரும் வெள்ளத் தை தடுப்பதற்காக ரூ.90 லட்சம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணி நடைபெறாததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெளியேற வழி யில்லாமல் தேங்கி கிடக்கிறது. சுமார் 500 வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள வீடு களிலும், உறவினர் வீடுகளி லும் தங்கி இருக்கிறார்கள் என்றார். திங்களன்று காலை பாஜக தலைவர்கள் தர்மராஜன், முத்துராமன், அய்யப்பன், மீனாதேவ் ஆகியோர் துப் பாக்கி ஏந்திய 2 போலீசாருடன் ஊட்டுவாழ்மடம் பகுதிக்கு வந்தனர். அவர்களில் முத்து ராமன்தான் இந்த பகுதியில் வீட்டுமனைகள் விற்பனை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சற்று நேரத் தில் சேவா பாரதி அமைப்பி னர் ஒரு வாகனத்தில் அந்த பகுதிக்கு உணவு பொட்டலங்க ளுடன் வந்து பாதிக்கப்பட்ட மக்களை தேடிக்கொண்டி ருந்தார்கள். சி.முருகேசன்