tamilnadu

img

ஓய்வூதியர், தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

சென்னை, நவ. 22 - ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்கக் கோரி 21 மண்டல அலு வலகங்களையும் முற்றுகையிட்டு போக்கு வரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவையை, நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களையும் மற்றும் ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்  களை வழங்க வேண்டும், 21 நாள் வேலை நிறுத்த  நாட்களை முறைப்படுத்தி ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். வேலைக்கு வந்தும் பணி வழங்க முடியாத  தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகள் மீது மேல் முறை யீடு செய்வதை கைவிட வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.22) இந்த போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பும் இணைந்து  இந்த போராட்டத்தை நடத்தின. இதன் ஒருபகுதி யாக சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதற்காக ஊர்வலமாக வந்த தொழிலாளர்களை காவல் துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலா ளர் பா.பாலகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.பாலாஜி,  எம்.செந்தில்குமார், கருணா நிதி, ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் நீலமேகம், பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பேசினர்.

ரூ.10 ஆயிரம் கோடி

இந்த போராட்டம் குறித்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளால் லாபம் இல்லையென்றாலும் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நட்டத்தை அரசு ஈடுகட்டுவதில்லை. அதற்கு பதிலாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி,  பணிக்கொடை (கிராஜூவிட்டி), கூட்டுறவு சங்கத் திற்கு பிடித்தம் செய்யும் தொகை ஆகியவற்றை எடுத்து அரசு போக்குவரத்துக் கழகங்களை நடத்துகிறது. இதன்படி தொழிலாளர்களின் 10 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து செலவு செய்து விட்டது. இதனால் பணி ஓய்வு பெறும் தொழி லாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை வழங்காமல் வெறும் கையோடு அனுப்பு கின்றனர்.

ரூ.1200 கோடி நிலுவை

2020 ஆம் ஆண்டு இறந்த தொழிலாளிக்கு கூட பணப்பலன்கள் கிடைக்கவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் கொடுக்க  வேண்டிய பணப்பலன்கள் 1200 கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிலுவையில் வைத்துள் ளது. அனைத்து துறை ஊழியர்கள், ஓய்வூ தியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி உள்ளனர்.  ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் ஐஏஎஸ் அதிகாரிக்கு கூட அகவிலைப்படி உயர்வு  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 86 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மட்டும் கடந்த 7 ஆண்டுகளாக அகவிலைப்படியை உயர்த்தா மல் உள்ளனர்.  போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர் களின் உழைப்பிலும், பணத்திலும்தான் செயல்  பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியி லும் இந்த அவலம் இருந்தது. அப்போது போரா டியபோது திமுக ஆதரித்தது. தேர்தல் பிரச்சா ரத்தின்போது இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்றார். அதன்படி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஆறுமுகநயி னார், “ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி 3 மாதங்  களை கடந்தும் முதலமைச்சர் அறிவிக்க வில்லை. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் முதலமைச்சரை சந்தித்தபோது, ஓய்வூதியர்களுக்கான நிலுவைகளை உடனடி யாக வழங்குவதாக முதலமைச்சரின் செயலா ளர்கள் தெரிவித்தனர். அதன்படி எதுவும் நடை பெறவில்லை. முதலமைச்சரின் அலுவலகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தையடுத்து சங்கத் தலை வர்கள் கே.ஆறுமுகநயினார், எம்.சந்திரன், வி. தயானந்தம், கனகராஜ், ஏ.ரைமண்ட், வீரராக வன் ஆகியோர் தலைமை செயலகத்தில் போக்கு வரத்துத் துறை செயலாளர் கோபால், முதல மைச்சரின் தனிச்செயலாளர் உமாநாத் ஆகியோ ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு  விருப்ப ஒய்வு பெற்றவர்கள், இறந்தவர்களுக்கு பண பலன்களை வழங்க அரசாணை வெளியிட இருப்பதாகவும், ஓய்வூதியர்களின் அகவிலைப் படி தொடர்பான வழக்கில் ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக நிலை எடுப்போம் என்றும் அதிகாரி கள் தெரிவித்தனர். போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை குறித்து டிசம்பர் 2 ஆம் தேதி தொழி லாளர் நலத்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.