தென்காசி ,ஏப்.19- குருவன் கோட்டை கிராம அருந்த திய மக்களின் வழிபாட்டு இடத்தில் வரு வாய்த் துறையால் போடப்பட்ட முள் வேலியை அகற்றி அந்த இடத்தை அவர்களிடமே ஒப்படைக்க வலி யுறுத்தி சிபிஎம், தீஒமுன்னணி உள் ளிட்டோர் புதனன்று ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை கிராமம் அருந்த தியர் மக்கள் காலங்காலமாக (நூற் றாண்டுகளுக்கு மேலாக) வழிபடும் பேச்சியம்மன் கோவில் மற்றும் வழிபாட்டு இடத்தின் (புறம்போக்கு நிலம்) வடபகுதியில் மேல்புறம் சுமார் 5 செண்ட் இடத்தை நூற்றாண்டு களுக்கு மேலாக அனுபவித்து அக் கோவிலுக்கு மின் இணைப்பும் பெற் றுள்ளனர். இந்நிலையில் அம்மக்களின் வழிபாட்டு இடத்தை வருவாய்த்துறை திடீரென கைப்பற்றி முள்வேலியிட்டு பட்டியலின அருந்ததியர் மக்களின் வழிபாட்டிற்கு இடையூறு செய்துள் ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை முறையிட்டும் எவ் வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இதனால் அருந்ததியர் மக்கள் கோவில் கொடைவிழா மற்றும் வழி பாடு செய்யமுடியாமல் உள்ளனர். பெரும்பாலான இந்து கோவில் வழி பாட்டு இடங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளநிலையில், பட்டிய லின அருந்ததியர் மக்களின் வழிபாட்டு உரிமை மட்டும் பறிக்கப்படுவது,சமூக நீதி மறுக்கப்படுவது ஆகும். வழி பாட்டு இடத்தில் போடப்பட்டுள்ள முள்வேலியினை அகற்றி அவ் விடத்தை அருந்ததியர் மக்களிடம் ஒப்படைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழர்கட்சி,பூர்வீக மக்கள் விடுதலைக்கட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலா ளர் பாலு தலைமையில் புதனன்று காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது.
இந்த காத்திருப்புப் போராட்டத் தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செய லாளர் பி.சுகந்தி , மாநில துணைச்செய லாளர் முருகன், மாவட்டத் தலைவர் பால்ராஜ், செயலாளர் கிருஷ்ண மூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கணபதி, குணசீலன் ,தங்கம், மாவட்ட குழு உறுப்பினர்கள் கனக ராஜ், மாடசாமி, பாரதி, திராவிட தமி ழர்கள் கட்சி தெற்கு மாவட்டச் செயலா ளர் வீரபாண்டியன்,பூர்வீக தமிழர் விடுதலை கட்சி நிறுவன தலைவர் இசைவாணன், தமிழ்புலிகள் கட்சி இளைஞர் அணி செயலாளர் தமிழ் குமாரன், பீடித் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மகா விஷ்ணு, மாதர்சங்க மாவட்டத்தலை வர் ஆயிசா, செயலாளர் மேனகா, பொருளாளர் சசிகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாகுழு உறுப் பினர் வெற்றிவேல் வீரகேரளம்புதூர் கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி குமார், குருவன் கோட்டை செயலாளர்கள் பால்ராஜ், ஆறுமுகம், மருதம் புத்தூர் செயலாளர் பத்திரகாளி ,பூர்வீக தமி ழர் விடுதலைக்கட்சி மாவட்டத் தலை வர் சிவா, தமிழ்புலிகள் கட்சி நக ரச்செயலாளர் சேகர், குருவன் கோட்டை ரெங்கன், தங்கராஜ், கிருஷ்ணன், பால் விவசாயிகளின் சங்க வள்ளியம்மாள், வள்ளிமயில், முத்துகனி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் காவல்துறை யினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.