கண்ணூர், டிச.31- பீடித் தொழிலாளர்களுக்கு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 5 அன்று மக்களவை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று சம்மேளன மாநாடு முடிவு செய்துள்ளது. அகில இந்திய பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் 8ஆவது மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் திரிபுரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களி லிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் துவக்கி வைத்தார். சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா நிறைவுரையாற்றி னார்.
நாடு முழுவதும் பீடித்தொழி லுக்கும், தொழி லாளர்களுக்கும் ஏற் பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்தும் அதிலிருந்து தொழிலை பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் பற்றியும் விரிவாக விவாதித்த னர். நாடு முழுவதும் பீடித்தொழிலில் சுமார் 80 லட்சம் பேர் ஈடுபட்டுள்ள னர். இதில், பெரும் பகுதியினர் பெண் தொழிலாளர்களாவர். இவர் கள் படிப்பறிவற்ற ஏழ்மை பின்புலத் திலும், சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை காட்டிலும் மிகக்குறைவான கூலியே வழங்கப்படுகின்றன. உழைப்புச் சுரண்டலில் கோர முக மாக பீடித்தொழில் உள்ளது. ஒன்றிய அரசின் நவீன தாராள மயக் கொள்கை அமலாக்கத்தி னால் பீடித்தொழிலும் கடும் நெருக்க டிக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, பண மதிப்புநீக்க நடவடிக்கை, அதீத மான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, புகை யிலை சட்ட திருத்தம் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற வைகள் பீடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித் துள்ளன. மேலும் சட்டவிரோதமான பீடி உற்பத்தி, கூலி மற்றும் வேலை நாட்கள் குறைத்தல், கூலி குறைவாக உள்ள மாநிலங்களுக்கு உற்பத்தி யை மாற்றுவது மற்றும் உரிமம் இல்லாமலும், ஜி.எஸ்டி. செலுத்தா மலும் பீடி கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பீடித்தொழிலாளர்களின் வேலை உத்தரவாதம், சமூக நல உத்தரவாதம் அளிக்கக்கூடிய பீடி மற்றும் சுருட்டுத்தொழிலாளர் பணி நிலைமைகள் சட்டம், பீடித் தொழி லாளர் சேமநல சட்டம் மற்றும் செஸ் சட்டம் ஆகிய மூன்று சட்டங்க ளை ஒன்றிய மோடி அரசு முடமாக்கி யுள்ளது. இதனால் பீடித்தொழி லாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கான உதவி தொகை, வீடு கட்டும் திட்டம் மற்றும் மருத்துவ சேவைகள் மறுக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து இந்த மாநாட்டில் கவலையுடன் பரி சீலித்தது.
பிரச்சார இயக்கங்கள்
இத்தகைய நிலைமைகளை விவாதித்த மாநாடு நாடு முழுவது முள்ள பீடித்தொழிலாளருக்கு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காண்ட் ராக்ட், சப் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்து பேக்டரி முறை கொண்டு வர வேண்டும். பீடித் தொழிலாளர் சேம நல திட்டங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பீடி சுற்றும் அனைத்து தொழிலாள ருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், வீடற்ற பீடித் தொழிலாள ருக்கு இலவச வீட்டுமனையுடன் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பிப்ரவரி 27 முதல் மார்ச் 27 வரை நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்து வது என்றும் ஏப்ரல் 5 அன்று தலை நகர் தில்லியில் நாடாளுமன்றம் முன்பு பீடித்தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும் இந்த மாநாட்டில் தீர்மா னிக்கப்பட்டது.'
புதிய நிர்வாகிகள்
இம் மாநாட்டில் சம்மேளனத்தின் தலைவராக கே.பி.சகாதேவன், பொதுச் செயலாளராக தேபாஷ்ராய், பொருளாளராக பீமன் சன்யால் உட்பட 19 நிர்வாகிகளும், 42 சம்மே ளன உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து சம்மேளன துணைத் தலைவராக எம்.பி.ராமச்சந்திரன், செயலாளராக கே. திருச்செல்வன், சம்மேளன உறுப்பி னர்களாக வி.நாகேந்திரன், ஏ.மகா விஷ்ணு, ஆர்.செந்தில்குமார், சி.சரவ ணன், ஏ.குருசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.