சென்னை, நவ.2- சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான குரூப் 4 தேர்வில் திருவொற்றியூர் எர்ணாவூர் சுனாமி குடி யிருப்பு பகுதியைச் சேர்ந்த திருநங்கை மேக்னா தேர்ச்சி அடைந்துள்ளார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில், சமூகம் இவர்களின் மீது திணிக்கும் அவலம் நிறைந்த வாழ்க்கை முறையில் இருந்து விலகி, கல்வியே விடுதலைக்கான ஆயுதம் என்பதை உணர்ந்து, சக திருநங்கைகள் ஒத்து ழைப்புடன் படித்து வெற்றி கண்டுள்ள மேக்னாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைந்திந்திய ஜன நாயக மாதர் சங்க நிர்வா கிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.மாமன்ற உறுப் பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் எஸ்.கதிர்வேல், பா. ஹேமாவதி, செல்வகுமாரி, பகுதிக் குழு உறுப்பினர் கே. வெங்கடைய்யா, செம்மல் அபேதன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), மாதர் சங்க நிர்வாகிகள் அல மேலு, புஷ்பா, சரஸ்வதி, ஜாபர் (தீக்கதிர்) ஆகியோர் கலந்து கொண்டனர். மேக்னாவிற்கு உறு துணையாக இருக்கும் சவுந் தர்யா கோபி உள்ளிட்ட திரு நங்கைகள் கடந்த காலங்க ளில் திருநங்கைகளுக்கு என்று குடியிருப்புகள் ஒதுக்கக் கோரி நடத்திய போராட்டங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நின்றதற்கு நன்றி கூறினர்.