tamilnadu

img

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்

தஞ்சாவூர், ஆக.20-  மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசி யம் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூரில் குயில் கூட்டம் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வை கறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்த அவர் பேசியதாவது: வள்ளுவர் காலத்திலிருந்து மனிதர் களிடையே எந்த வேறுபாடும் இல்லை என்ற கருத்தோட்டம், இப்போது முற்றி லும் சீரழிந்துவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. எல்லா உயிர்க்கும் பிறப்பி னால் வேற்றுமை கிடையாது என்ற சிறந்த  சிந்தனையை வெளிப்படுத்தியவர் வள்ளு வர். அவர் வழியில் வந்துள்ளதாக நாம்  பெருமை பேசுகிறோம். ஆனால், இப்போது மாணவர்களின் பிஞ்சு உள்ளங் களில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. இத னால், புத்தகம் எடுத்துப் படிக்க வேண்டிய  கையில் அரிவாளை ஏந்திச் சென்று சக மாணவரை வெட்டுகிற கொடுமை தமிழ்நாட் டில் நிகழ்ந்துள்ளது. வள்ளுவர் காலத்திலிருந்து பெரியார்  காலம் வரை சாதிக்கும், மனித வேறுபாட்டுக் கும் எதிராக பல்வேறு கருத்துகள் எடுத்து ரைக்கப்பட்டன. அவையெல்லாம் விழ லுக்கு இறைத்த நீர் போல ஆகிவிட்டதோ என நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் விடுதலை போராட்ட காலத்தில் இமயம் முதல் குமரி வரை பரவிக் கிடக்கிற பல்வேறு மொழி பேசுப வர்கள், வெவ்வேறு மதக் கோட்பாடு உடை யவர்கள், சமய நம்பிக்கையற்ற நாத்திகர் கள் என அனைவரும் ஆங்கிலேய ஏகாதி பத்தியத்துக்கு எதிராகப் போராடி, ரத்தம்  சிந்தி விடுதலை பெற்றுத் தந்தனர். இது  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற் காகவா அல்லது ஒற்றுமையைச் சீர்குலைக் கவா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் வீடுகள் முன்னறிவிப்பின்றி புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் காட்டாட்சி நடைபெறுகிறது. மன்னராட்சி யில்கூட இப்படி நிகழ்ந்தது கிடையாது. இந்த நாடு எங்கே, எதை நோக்கிப் போ கிறது? இதன் விளைவு என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு எல்லா நாடுகளிலும் ஏழைகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள் புறக் கணிக்கப்படுகின்றனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பெரிய பெரிய நிறுவனங்கள்தான் ஆட்சி செய்கின்றன. இதுபோன்ற போக்கை எதிர்த்து போராட வேண்டும். இப்போது மத்தியில் நடை பெறுகிற காட்டாட்சிக்கு நாம் இந்த முறை முற்றுப்புள்ளி வைக்கத் தவறிவிட்டால், எதிர்காலத்தில் ஜனநாயகம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.  இவ்வாறு நெடுமாறன் பேசினார். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். மலரை முனைவர் கம்பன்  கனகசபை, ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி, முனைவர் இரா.குணசேகரன், விவேகானந்தன், செல்ல.கலைவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  முனைவர்கள் கு.திருமாறன், மு.இள முருகன், பா.மதிவாணன், இரா.சுப்பிர மணி ஆகியோர் மலரை அறிமுகம் செய்து  பேசினர்.