உதகை, ஏப்.13- நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலை ஊழியர்கள் 23 ஆவது நாளாக உறுதி மிக்க போராட்டத்தை முன்னெ டுத்து வருகின்றனர். கோடை விழா துவங்க உள்ளநிலையில், தோட்ட பரா மரிப்பு பணிகள் முழுமையாக முடங்கி யுள்ள நிலையில், வேளாண்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர் களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை யில் தினக்கூலி பணியாளர்களாக பணி யாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்க ளின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனம் எடுக்காத நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தோட்டக் கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து உதகை அரசு தாவர வியல் பூங்காவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். மரத்துக்கு மனு கொடுத்தல், பிச்சை எடுத்தல், தாவரவியல் பூங்கா குட்டையில் இறங்கி போராடுதல், முத லமைச்சருக்கு மனு அனுப்புதல் மற் றும் ரேசன் கார்டுகளை ஆட்சியர் அலு வலகத்தில் ஒப்படைத்தல் என பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்திய 4 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து போராட்டத்தை ஊழி யர்கள் தீவிரப்படுத்தினர். இந்நிலை யில், தோட்டக்கலை துறை அலுவலர் களுடன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத் திருந்தார். இதைத்தொடர்ந்து தோட்டக்கலை துறை ஊழியர்கள் கலந்து ஆலோ சனை செய்து போராட்டத்தை தற்காலி கமாக வாபஸ் பெறுவதாக அறிவித்த னர். இதன்படி, ஊழியர்கள் பூங்கா வுக்கு பணிக்கு திரும்பினர். ஆனால் பூங்கா வருகை பதிவேட்டில் கையெ ழுத்திடாமல் பணிக்கு செல்வதாக அறி வித்தனர். வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டு தான் பணி செய்ய வேண்டும் என்று பூங்கா நிர்வா கத்தினர் அறிவுறுத்தியதால், வழக்க மான பணிகளை மேற்கொள்ளாமல் வீடு திரும்பினர். எனவே பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகளும் அலுவலர்களும் மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை தலை மைச் செயலகத்தில் மீண்டும் தோட்டக் கலை இயக்குநர் மற்றும் இணை இயக் குநர் அமைச்சர் பெருமக்கள் மற்றும் தோட்டக்கலை ஊழியர்கள் பேச்சுவார்த் தைகளை மேற்கொண்டனர். கோரிக் கைகள் நிறைவேறும் தொடர் போராட் டத்தை முன்னெடுக்க உள்ளதாக ஊழி யர்கள் தெரிவித்தனர்.