tamilnadu

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க இணையதளத்தை திறந்திடுக தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்  விண்ணப்பிக்க இணையதளத்தை திறந்திடுக தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

சென்னை, ஜூன் 7- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க - தமிழக பள்ளிக் கல்வித் துறையின் rteadmission.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் மூலமே விண்ணப்பிக்க முடியும்.  வழக்கமாக கடந்த கல்வியாண்டு வரை இந்த சேவை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த ஆண்டு இது வரை (ஜூன் 4) அரசின் இணைய தளம் திறக்க வில்லை. இதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.  இணையதளத்தில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து தகுதியுள்ள விண்ணப்பங்களை பள்ளிகளுக்கு அனுப்பும். பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையால் சரிபார்த்து அனுப்பப்பட்ட  விண்ணப்பங்களின் எண்ணிக்கை தங்கள் பள்ளியின் 25விழுக்காட்டிற்குள் இருந்தால் அனைத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்.  ஒரு வேளை விண்ணப்பித்த மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பெற்றோர் முன்னிலையில் குலுக்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும். இந்த வருடம் இது வரை அரசின் இணைய தளம் இதுவரை திறக்கப்படவில்லை. உடனே திறந்தாலும், இந்த அனைத்து நடைமுறைகளும் முடிந்து மாணவர் பள்ளி வகுப்பறைக்கு செல்ல ஆகஸ்ட்  மாதம் ஆகிவிடும்.  எனவே  பெற்றோர் தங்களது குழந்தை களுக்கு விண்ணப்பிக்கும் வகை யில் கட்டாய கல்வி உரிமை சட்ட இணையதளத்தை மாநில அரசு திறக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.