ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு
விருதுநகர், ஜுன் 4- தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன், மாநில பொருளாளர் எம்.சக்திவேல் உட்பட மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : தமிழகத்தில் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் இயங்கி வந்த 4 பஞ்சாலைகள் உள்ளன. இவை கொரோனா பரவலைக் காரணம் காட்டி கடந்த 4 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, உடனடியாக ஆலை களை இயக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர் களுக்கு சரியான விலையில் நூல் கிடைக்க வேண்டும். அவர்களின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 6 கூட்டுறவு நூற்பாலை களில் ஆயிரம் பெண்கள் உட்பட 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஆயிரம் பெண்கள் இருந்தால் நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால், இச்சட்டத்தை அமல்படுத்தவில்லை. தினசரி ஊதியம் ரூ. 544 வழங்கு வதில்லை. எனவே, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஞ்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப் படவில்லை. எனவே,குறைந்தபட்ச கூலியை உடனடியாக வழங்கிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. வரும் ஜூலை 9 இல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பஞ்சாலைத் தொழி லாளர்கள் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.