tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் கரிகிலி  பறவைகள் சரணாலயம் ஆகிய 3 இடங்களுக்கு சர்வதேச முக்கியத் துவத்தை குறிக்கும் ராம்சர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கோடியக் கரை சரணாலயம் இதே அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ‘ராம்சர்’ திட்ட அங்கீ காரம் பெற்றஇடங்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.  
  2. ‘பிரதமர் மோடியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இது வரை தேசிய கொடி ஏற்றி யதே இல்லை. தேசபக்தி யையும் அவர்கள் வெளிப் படுத்தியதில்லை. ஆனால் சுதந்திர தினத் தன்று மக்கள் அனை வரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண் டும் என்று பிரதமர் மோடி கூறுவது  வெளி வேஷமே” என அசாம் மாநிலத்தின் ஐக்கிய ஜன நாயக முன்னணி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் சாடியுள்ளார்.
  3. 2024-ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி மையத்தில் செயலாற்றி வருகின்றன.
  4. கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலை யங்களையும் விரிவாக் கம் செய்யும் பணிகள் குறி த்தும் விமான போக்கு வரத்து அமைச்சரிடம் ஆலோசனை நடத்தப் பட்டது என தில்லி யில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
  5. நாட்டில் புதிய மாநி லங்கள் உருவாக்குவது குறித்து ஒன்றிய அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை என நாடாளு மன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
  6. சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்பி ஸ்ரீகுமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது  அகமதா பாத் செஷன்ஸ் நீதிமன்றம்.
  7. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா  மாநிலம் நாக்பூரில் காங் கிரஸ் கட்சியினர் போரா ட்டம் நடத்தினர்.  அம லாக்கத்துறை அலுவல கத்தில் நின்று கொண்டி ருந்த காருக்கு தீ வைத்த னர்.
  8. இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ தனது முதல் சீனப் பயணத்தின்போது வர்த்தகம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக சீனா செல்லவிருக்கும் விடோடோ, அங்கிருந்து தனது ஆசியப் பயணத்தின் முதல் கட்டத்தைத் துவக்குகிறார். சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை சந்திக்கவிருக்கும் விடோடோ, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பற்றிப் பேசவிருக்கிறார்.
  9. உலகின் பல்வேறு நாடுகளில் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் டொமினிகன் குடியரசிலும் எதிரொலித்துள்ளது. மின்கட்டண விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்,  விலைகளை சீரமைக்க ஜனாதிபதி லூயிஸ் அபிநாடர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது ஒப்புதல் நடைமுறைக்கு வரவில்லை என்றால், போராட்டங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  10. இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் நலன்களைப் பாதுகாக்க சிறைக்குள்ளேயே இரண்டு பேர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவர்களின் ராயித் ரய்யான் 100நாட்களும், காலில் அவாவ்தே 111 நாட்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இவர்களின் போராட்டம் தொடர்கிறது. தற்போது சிறைகளில் உள்ள  40 பேர் இவர்களுக்கு ஆதரவாகத் தங்களின் உண்ணாவிரதப் போரா ட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.