tamilnadu

img

கபடி போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி முதலிடத்தில் வெற்றி

பழனி,நவ.4- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 கல்லூரி அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி அணிக்கும், ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரி அணிக்கும் நடைபெற்றது. இதில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வெற்றி பெற்றது .இரண்டாம் இடத்தை சக்தி கல்லூரியும் , மூன்றாம் இடத்தை கம்பம் ஆதி சஞ்சன கிரி கல்லூரியும், நான்காம் இடத்தை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அணியும் பெற்றன . பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் . முனைவர் ந.புவனேஸ்வரி  வரவேற்றார். கல்லூரியின் பேரவை துணைத் தலைவர் முனைவர். சி .வாசுகி முன்னிலை வகித்தார். தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ந. நடராஜன் வெற்றி பெற்ற வீராங்கனைக ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகளை வழங்கி னார். கோவில் துணை ஆணையர் அ .ர. பிரகாஷ்  வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் இரா. கலையரசி  நன்றி கூறினார்.