tamilnadu

img

கூட்றம்மாப்பொண்ணு - நாகை ஆசைத்தம்பி

பாலக்குறிச்சி அப்படி ஒன்னும் பெரிய ஊர்  கெடயாது. இருந்தாலும் நாகப்பட்டினத்திலி ருந்து ஆறாம் நம்பருன்னு ஒரு டவுன்பஸ் வருமளவுக்கு தார் ரோடு உள்ள கிராமம்தான் அந்த ஊர்ல தான் பத்தாம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூடம் இருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் தாயம்மா கூட்டி அள்ளுர வேலை பாக்குது,,, தாயம்மான்னு பேரைச் சொன்னதும் ஏதோ வயசான அம்மானு நெனைக்க வேண்  டாம் ஒரு இருபத்து ஐந்து வயசுதான் இருக்கும் அந்த  அம்மாவோட பொண்ணு மாலா அதே பள்ளியில்தான் அஞ்சாப்பு முடிஞ்சி இப்பதான் ஆறாம்பு வந்திருக்கு இப்போ என்னடான்னா நான் படிக்கல நான் பள்ளிக்  கூடம் பக்கமே வரமாட்டேன் எனக்கு படிக்கப்புடிக்க லன்னு ஒரே அடம்பிடிக்குது அடி ஏன்டி சன்டாளின்னு ஆளாளுக்கு கேக்கும்போது அந்தப் பொண்ணு சொன்ன  காரணம் பகீருன்னு தூக்கிவாரிப்போட்டது நம்மள மாதரி ஏழப்பாழயிங்களுக்கு படிப்புதான்டி சொத்து அதுவும் பொம்பளப்புள்ள படிக்கலன்னா காக்கா சுக்கு மதிக்கமாட்டாங்க ஏதோ நான் எட்டாம்பு வரைக்கு  படிச்சத்தினால எனக்கு இந்த கூட்டுற வேலயாவது கெடச்சது நீ நல்லப்படிச்சி நல்ல வேலக்கி போகணு முன்னு அந்த அம்மாவும் பக்கத்துல உள்ளவங்களும் சொன்னாங்க அந்தப் பொண்ணு ஒரே புடிவாதமா நின்னுச்சி யாரு என்ன சொன்னாலும் நான் கேக்கமாட்டேன்  வேணுமுன்னா வேற ஸ்கூலுக்கு போறேன் இந்த ஸ்கூலு  வேண்டாமுன்னு வீட்டுக்குள்ள ஓடிப்போயி அழ ஆரமிச்சிடுச்சி, பயந்துப்போன அந்த அம்மா “அடியே செல்லம்,,,, என் தங்கமல்ல யாரு என்ன  சொன்னா... பசங்க ஏதாவது கிண்டல் பன்னுனாங்களா...? வாத்தியார் ஏதாவது சொன்னாரா...? ஏதாவது சொன்னா தானே கேக்கமுடியும் சொல்லுடி செல்லம்...” “வாத்தியாரு...பசங்க...பொண்ணுங்க எல்லாரும்  என்ன கூட்றம்மாப்பொண்ணு...கூட்றம்மாப்பொண் ணுன்னு கூப்புடுறாங்க அது எனக்கு அவமானமா இருக்குன்”னு மறுபடியும் அழ ஆரமிச்சிடிச்சி இதக்கேட்டே அந்தம்மா...

“அடி கொல்லையில போறவளே நீ ஒன்னாப்பு சேந்ததிலிருந்தே அப்படிதானடி கூப்புடுறாங்க,,, இப்ப  எங்கயிருந்து வந்ததுடி ஒனக்கு அவமானம் ரொம்பதான் ஒனக்கு வெகுமானம்,,,” “யம்மோ,,,அப்ப நான் சின்னப்பொண்ணு ஒன்னும் தெரியல இப்போ எனக்கு என்னமோ பண்ணுது ஒருத்தக்கூட என்னோட பேருச்சொல்லியே கூப்பிடுறது இல்ல,,, எனக்கு படிப்பே வேண்டாம், இல்லன்னா செம்பியன்மாதேவி ஸ்கூலுக்கு போறேன் அதுக்கு மேல ஒங்க இஷ்டம்” “அவ்வளவுதானே இன்னைக்கே நான் பெரிய சாருகிட்டப்பேசி ரிக்காடுசீட்டு வாங்கயாறேன் அப்புறம் நீ அந்த ஊர்லயாவது போய் படிக்கலாம் சீக்கிரம் பொறப்படு என்கூடவே வா பெரிய சாருக்கிட்ட பேசலாம்” இந்தம்மா பொண்ண மொகத்த கழுவிட்டு வாடின்னு  சொல்லிட்டு தலையைப் பின்னிவிட்டு புட்டா மாவெல்லாம்  அடிச்சி கூட்டிக்கிட்டு விருவிருன்னு போயி அந்தப் பொண்ண ஒரு ஓரமா ஒக்காருடி சாரு வரட்டும் அதுக்குள்ள  நான் எல்லாத்தையும் கூட்டி வாரிட்டு வரேன்னு கூட்ட ஆரமிச்சாங்க,,,, அதுக்குள்ள மாலாவோட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்து ஏன்டி,என்னடி ஆச்சி ஸ்கூலுக்கு வரலன்னு விசாரிக்க ஆரமிச்சிட்டாங்க,,, எல்லாருக்கும் ஒரே பதிலாய் எனக்கு படிக்க பிடிக்கல டின்னு மட்டும் சொல்லிட்டு கம்முன்னு ஒக்காந்துட்டு,,, அப்போதான் பெரிய சாரு கேட்டுக்குள்ள நொழஞ்சாரு இந்தப் பொண்ணப் பாத்ததும் “நீ கூட்றம்மாப் பொண்ணுதானே என்னாச்சி ஸ்கூலுக்கே வரல” இந்தப்பொண்ணு தலயத் தொங்கப்போட்டுக்கிட்டு நின்னது

“சரி,,,சரி கிளாஸ் ஆரமிக்கட்டும் அப்புறம் பேசிக்கிறேன்” னு அவரோட சீட்டுக்கு போய்ட்டாரு அந்தம்மா கூட்ற வேலயெல்லாம் முடிச்சிட்டு பிரேயர்  முடிஞ்சதும் பெரியசாரு ரூமுக்கு மகள கூட்டிக்கிட்டுப் போய்  “இவ இனிமே இங்க படிக்கமாட்டேன்னு சொல்றாங்க  சார் அதனால் டி. சி. கொடுத்திடுங்க சார் நான் அவள செம்பியன்மாதேவி ஸ்கூலுல சேத்துடுறேன்” “ஏம்மா,,,இங்கயென்ன கொறச்சலாம் மகாராணிக்கு கூப்பிடுங்க அவள” “மாலா இங்க வாம்மா சாரு கூப்பிடுறாரு” மாலா வந்து பவ்வியமா நின்னா “ஏம்மா ஒனக்கு என்ன பிரச்சனம்மா “ மாலா தலய கவிழ்ந்து அழுதப்படியே,,, “எல்லாரும் கூட்றம்மாப்பொண்ணு கூட்றம்மாப் பொண்ணுன்னு கூப்பிடுறாங்க சார் எனக்கு அது புடிக்கல அவமானமா இருக்கு “ பெரிய சாருக்கு செவிலில் அறைந்ததுப்போல இருந்தது நாமும் பலமுறை அப்படிதானே கூப்பிட்டு  இருக்கிறோம் என்ற நினைத்தவர் சமாளித்துக்கொண்டு,,, “ஒங்கம்மா இங்க கூட்ற வேல செய்றதாலே அப்படி  கூப்பிடுறாங்கம்மா இனிமே அப்படி சொல்ல வேண்டா முன்னு சொல்லிடலாம் இங்கேயே படிம்மா” இடைமறித்த கூட்றம்மா,,,

“அதெல்லாம் வேண்டாம் சார் அவ மனசு வெறுத்துப்  போய்தானே சொல்ற இனிமே இருக்க இருக்க அவ  பெரிய பொண்ணு தொடர்ந்து இங்க படிச்சா அப்படி தான் கூப்பிடுவாங்க அது அவ படிப்ப பாதிக்கும் அத னால நீங்க அவளுக்கு டி.சி கொடுத்திடுங்க சார்” “ஓக்கேம்மா அதுக்கப்பறம் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல கொஞ்சம் வெளியில வெயிட் பன்னுங்க ரெடி பன்னிட்டு கூப்பிடுறேன்” அரைமணி நேரம் கழித்து உள்ளே வரச்சொன்ன பெரிய சார் கையெழுத்து வாங்கிக்கொண்டு சர்டிபி கேட்டை கொடுத்து எங்கப்போனாலும் நல்லாப் படிம்மான்னு சொல்லி வாழ்த்தி அனுப்பினார்

மறுநாள் காலையில போய் அவதிபவதியா கூட்ற  வேலய முடிச்சிட்டு பெரிய சாருக்கிட்ட இந்தப் புள்ள யக்கொண்டி அந்த ஸ்கூலுள சேத்துவிட்டுட்டு வாரேங்க சாருன்னு சொல்லிட்டு செம்பியன்மாதேவி கெவர்மெண்ட் ஸ்கூலுக்கு தாயும் மகளும் போனாங்க அங்கே வரவேற்ற பெரிய சாரு விவரம் கேட்டார் சொன்னாங்க “இப்படிதாம்மா இருக்கனும் சுயமரியாதைங்றது இதுதான் சும்மவாச் சொன்னான் பாரதி ரௌத்திரம் பழகுன்னு.... உன்னோட கோபம் நியாயமானதுதான் இதே  கோபத்தோடு படிச்சி பெரிய ஆளா வரணும் இன்னைக்கு  கோடிஸ்வரனா இருக்குறவன் நாளைக்கு ஒன்னு மில்லாம ஆகிடலாம், பணத்த திருடலாம் படிப்பைத் திருட முடியாது இன்னைக்கு ஒருத்தன் பி.ஏ.படிச்சா அவன்  சாவுற வரைக்கும் பி.ஏ.ன்னு போடலாம் குறைவே குறை யாது பணம் குறையலாம் கூடலாம், படிப்பு நிரந்தர மானது அதனால நீ படிச்சி பெரிய ஆளா வரணும்”னு அட்வைஸ் பன்னிட்டு ஆறாம் வகுப்பில் இவரே கொண்டி விட்டுட்டு ஆறாம் வகுப்பு வாத்தியாரிடம் சொல்லிட்டு வந்தார் எல்லாமே நேத்து நடந்ததுப்போலதான் இருக்கு ஆனா.... காலங்கள் உருண்டோடின தாயம்மா பொண்ணு மாலா காலேஜ் முடிச்சிட்டு டீச்சர் டிரைனிங் முடிச்சிட்டு தான் அவமானப்பட்டு வெளியேறிய அதே பள்ளியில் இன்று டீச்சராக பணி கிடைத்திருக்கிறது,,, பசங்க எல்லா ரும் புது டீச்சர்... புது டீச்சருன்னு கூப்பிடுறாங்க தாயம்மா வை இப்போ யாரும் கூட்றம்மான்னு சொல்றதில்ல புதுடீச்சர் அம்மான்னுதான் சொல்றாங்க... மாற்றம் எப்படி வேண்டுமானாலும் வரலாம் படிப்பால் வரும் மாற்றமே நிரந்தரமா இருக்கும்.