மதுரை, நவ.19- மதுரை பாலர் பூங்கா சார்பில் நேரு பிறந்த தினமான குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக ஞாயிறன்று மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் ஓவியத் திரு விழா நடைபெற்றது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாண வர்கள் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டு தங்கள் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தி னர். கலந்து கொண்ட அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியர்கள் பாபு, சரவணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு சிறந்த ஓவியங்களை தேர்வு செய்த னர். நிகழ்ச்சியை பாலபுரஸ்கார் விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் உதய சங்கர் துவக்கி வைத்தார். புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய அருள் செல்வம் வாழ்த்திப் பேசினார். பாலர் பூங்கா மாநில பொறுப்பாளர் என். அமிர்தம் பங்கேற்றார். ஓவியக் கலையில் ஆர்வமுள்ள 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தொடர் ஓவிய பயிற்சி வகுப்புகள் பாலர் பூங்கா சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரை மாவட்ட பாலர் பூங்கா ஒருங்கிணைப் பாளர்கள் கோபி, மா.பாண்டியராஜன், வி.ரமேஷ், வடிவேல், நிருபனா, பாலா, காமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.