tamilnadu

img

பேச்சியம்மன் பால்பண்ணை குழுமம் இல்லத் திருமண விழா

பேச்சியம்மன் பால்பண்ணை குரூப்ஸ் நிறுவனரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  தோழர் ஆர்.பாலுச்சாமி- பி.வாசுதேவன் இல்லத் திருமண விழா மதுரையில் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்திரன், மா.கணேசன், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்கள் ஆர்.வினோத் ப்ரஹாம்- எஸ்.நந்தினி (எ) பூஜா ஆகியோரை வாழ்த்தினர். மணவிழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு மணமகளின் பெற்றோர் பி.செல்வம்-எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் நன்றி கூறினர்.