tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

 சென்னை, செப். 11 - தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செப்டம்பர் 12 அன்று மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செப். 13 முதல் 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிர்மலா சீதாராமன் தமிழகம்  வருகிறார்

சென்னை, செப். 11 - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப். 14 அன்று சென்னை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஜிஎஸ்டி விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காகவே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.