திண்டுக்கல், மார்ச் 20 - திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை வெற்றி பெறச் செய்வதே எங்களது குறிக்கோள் என திண்டுக்கல் நகர ஜமாத் கமிட்டியினர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து ஜமாத் கமிட்டி செயலாளர் ஹாஜி முகமது நசுருதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக அரசின் திட்டங்களை இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்வோம். அனைத்து ஜமாத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்களிக்கச் செய்வோம்; அவர் வெற்றி உறுதி’’ என்றார். நிகழ்வில், என்ஜிஓ காலனி ஹவ்வா பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் முகமது நஸ்ரூதீன், கேஏஎம் நகர், பாரதியார் தெரு குடியிருப்போர் நல சங்க பொருளாளர் ஹாஜி கலிபுல்லா, உதவிச் செயலாளர் முகம்மது ஹனிபா மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட சிறுபான்மை மக்கள் நல பிரிவு மாநிலத் துணைத் தலைவர் வ.கல்யாண சுந்தரம், மாவட்ட தலைவர் ஷாஜகான் உட்பட பலர் உடனிருந்தனர்.