திருப்பூர், டிச.13- 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜன வரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத் தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வா கமும், பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து இந்த புத்தகத் திருவிழா வை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை யில் 19 ஆவது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியதாவது: சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாண வர்களிடையே புத்தக வாசிப்பு பழக் கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்க மாக எடுத்துச் செல்ல சென்னை புத்த கக் கண்காட்சி போன்று தமிழ்நாட் டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது புத்தகத் திருவிழாவை திருப்பூரில் அமைந்துள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தின மும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த மாபெரும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என்று ஆட்சியர் எஸ்.வினீத் கூறி னார். இவ்விழாவில் 120 புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர் களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டி மன்றங்கள், பள்ளி மாணவ, மாண வியர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்துறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களும் மாணவ, மாணவி யர்களும் கலந்து கொண்டு பயன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புத்தக திருவிழா நடைபெறும் நஞ்சப்பா அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் அதற் கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தற்போது முதல்கட்ட ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட நூலக அலுவலர் (பொ) வே.மாதேஸ்வரன், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆர்.ஈஸ்வரன், அ.நிசார் அகமது, எஸ்.சுப்பிரமணி யம், மோகன் கார்த்திக், முத்துராம லிங்கம், கீதாஞ்சலி கோவிந்தப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.