tamilnadu

img

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த  சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மரியாதை செலுத்தப்பட்டது

மதுரை, மே 18- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிதம்பர புரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (47). ஓய்வு பெற்ற  ராணுவ வீரரான இவர், சித்து மூன்றடைப்பு அரசு உயர்  நிலைப் பள்ளியில் இள நிலை உதவியாளராக பணி யாற்றி வருகிறார். இவரு டைய மகன் சபரீஸ் ( 11).  இந்த சிறுவன் அந்த பகுதி யில் உள்ள பள்ளியில் 6 ஆம்  வகுப்பு படித்து வந்தான்.  இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி மதியம் 1:30  மணி அளவில் தனது உற வினர் ஒருவருடன் இருசக்கர  வாகனத்தில் சென்றார்.  அப்போது, அருப்புக் கோட்டை அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து அருப்  புக்கோட்டை மற்றும் மது ரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறு வன் சபரீஸ் அனுமதிக்கப்பட்  டான். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்  சைக்காக அன்றைய தினம் மதுரை அரசு ராஜாஜி மருத்  துவமனையில் அவசர சிகி ச்சை பிரிவில் அனுமதிக்கப்  பட்டார். ஆனால் வெள்ளி யன்று காலை சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடல் உறுப்பு களை தானம் செய்வது தொடர்பாக அவரது தந்தை  சரவணனிடம் மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து அவர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்  தனர். மதுரை அரசு மருத்துவ மனை முதல்வர் அருள் சுந்த ரேஸ் குமார் ஆலோசனை யின் பெயரில் மருத்துவக் குழுவினர் சிறுவனின் உட லில் இருந்த கல்லீரல், சிறுநீர கங்கள், கருவிழிகள் ஆகிய வற்றை அறுவை சிகிச்சை கள் மூலம் அகற்றினர். அதன்படி கல்லீரல்,  பெரம்பலூர் தனலட்சுமி  சீனிவாசன் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக் கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மறுத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை  அப்பல்லோ மருத்துவ மனைக்கும் வழங்கப்பட் டது. இதுபோல் கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தான மாக வழங்கப்பட்டன. இத னைத் தொடர்ந்து அரசு மரி யாதையுடன் சிறுவனின் உடல் அவரது குடும்பத்தின ரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதில் அரசு ராஜாஜி மருத்து வமனை முதல்வர்  அருள்  சுந்தரேஸ் குமார், மருத்துவ  இருப்பிட அதிகாரிகள் சர வணன், முரளிதரன், மருத் துவ கண்காணிப்பாளர் குமர வேல் உள்ளிட்டார் கலந்து கொண்டு சிறுவனின் உட லுக்கு மரியாதை செலுத்தி னர். இந்த உடல் உறுப்பு  தானத்தின் மூலம் 4 நபர்  கள் பயன் பெற்றதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.