tamilnadu

வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

திருநெல்வேலி, ஜூன் 11-  நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் எண், கைப் பேசி எண், வங்கி கணக்கு எண், மாநிலம் உள்ளிட்ட விவரங் களை அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழி லாளர் துறையின் இணையதளம் http://la bour.tn.gov.in/ism/ -இல் முழுமையாக பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும், சுயமாக தொழில் செய்யும் வெளிமாநில தொழி லாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல் ஏற்ப டுத்தி மேற்படி தொழிலாளர் துறையின் இணையதளத்தில் தங்களது முழு விவரத்தை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.  மேலும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வெளிமாநில தொழி லாளர்களை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் உரிமம் பெற்று அத்தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.