tamilnadu

டிச.31-க்குள் அரசு பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க உத்தரவு

சென்னை, டிச.12- தமிழகத்தில்  உள்ள அரசு  பள்ளிகளில் டிசம்பர்  31 ஆம் தேதிக்குள் பாலியல் புகார் பெட்டிகளை அமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், முதன்மை கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் மாண வர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.7.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள தற் போது அனுமதி தரப்படுகிறது. மேலும் அதற்கான வழிமுறை கள் வெளியிடப்படுகின்றன. அதன்படி மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளி லும் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும். பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை திறந்து அதில் இருக்கும் புகார்களுக்கு உடனே தக்க நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி வளாகங்க ளில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்க வேண்டும். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவு றுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.