tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு

சென்னை,பிப்.1- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்துவதற்காக ரூ. 14.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட உத்தரவில், “கல்வியாண்டு முழுவ தும் பள்ளிகளில் நிகழும் தொடர்ச்சி யான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பை ஆண்டு இறுதியில் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த ஆண்டு விழா நல்வாய்ப்பாக அமைகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆண்டு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு விழா நடத்துவதற்கு ஏது வாக ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் எண் ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மாணவர் களின் எண்ணிக்கை 100-க்கு கீழ்  உள்ள பள்ளிகளுக்கு ரூ.2,500, அதிக பட்சமாக 2,000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.50,000  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.