குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை கண்டித்து புதனன்று (செப்.6) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டு பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.