tamilnadu

மாவட்ட வருவாய் அலுவலகங்கள் முன்பு கால்நடைகளுடன் போராட்டம்

ஏப்ரல் 28ல் நடைபெறுகிறது

சென்னை,மார்ச் 25- மேய்ச்சலுக்கு தடைவிதிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மார்ச் 25 அன்று  திருப்பூரில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்  டி.ரவீந்திரன் தலை மை வகித்தார். மாநில பொதுச்செய லாளர்  பெ.சண்முகம், மாநில பொருளா ளர் கே.பி.பெருமாள், மாநிலச் செய லாளர் டி.கண்ணன், மாநில துணைத் தலைவர் ஆர்.மதுசூதனன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னணி செயல்வீரர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 04.03.2022 அன்று தேனி மாவட்டத் தில் மலைமாடுகள் மலைகளில் மேய்ப்பது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்து உத்தரவிட்டது. சட்டவிரோதமான உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதையொட்டி, தீர்ப்பில் மாற்றம்  செய்வதாக நீதிபதிகள் அறிவித்த னர். மார்ச் - 17 ஆம் தேதி திருத்தப் பட்ட தீர்ப்பில், வன விலங்கு சரணா லயங்கள் மற்றும் தேசிய பூங்காக் களில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்தும், இதர வனப்பகுதிகளில் விதி களுக்குட்பட்டு அரசு அனுமதிக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதனால், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலய பகுதிகளுக்குள் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் வனத்தைச் சார்ந்து  வாழும் இதர சமூகத்தினர் கால் நடைகள் மேய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுவதுடன், பால், இறைச்சி மற்றும் இயற்கையான எரு  பற்றாக்குறையும் ஏற்படும். மேலும் மலைகளில் இப்போதிருக்கும் ஆடு-மாடுகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல் கொத்து கொத்தாய் செத்து மடியும் நிலை உருவாகும். வன உரிமைச்சட்டம் 2006 இல்  மேய்ச்சல் உரிமை வழங்கப் பட்டிருப்பதுடன் வன விலங்கு சரணா லயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மக்களுக்கு  வழங்கியுள்ள வன உரிமைகள் பொருந் தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்க ளுக்கு வன உரிமைச் சட்டம் வழங்கி யுள்ள உரிமைகளை மறுக்கும் வகை யில் தீர்ப்பு அளித்துள்ளது சட்டவிரோத மானது ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு, மக்களின் வன உரிமைகளை பாது காக்கும் வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கூட்டம் கேட்டுக் கொள்கிறது. தீர்ப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும், தீர்ப்புக்கு கடுமையான எதிர்பை வெளிப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த்துறை அலுவலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான கால் நடைகளுடன் ஏப்ரல் 28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.