tamilnadu

img

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

புதுதில்லி, ஜூன் 21 - குடியரசுத் தலைவர் தேர்த லில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்  பாளராக யஷ்வந்த் சின்ஹா அறி விக்கப்பட்டுள்ளார்.  தில்லியில் தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத் பவார் தலை மையில் நடைபெற்ற எதிர்க்கட்சி களின் ஆலோசனைக் கூட்டத்திற் குப் பிறகு குடியரசுத் தலைவர் பத விக்கு யஷ்வந்த் சின்ஹாவின் பெயர்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், தில்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் கடந்த ஜூன் 15 அன்று நடைபெற்றது. அப்போது, தேசியவாத காங்கி ரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை  வேட்பாளராக நிறுத்த திட்டமிடப் பட்டது. ஆனால், அவர் தனக்கு  விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார்.  இதையடுத்து, தேசிய மாநாடு  கட்சியின் தலைவர் பரூக் அப் துல்லா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரி சீலிக்கப்பட்டன. இதனிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்  பவார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று மீண்  டும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடை பெற்றது. காங்கிரஸ், இடதுசாரி கள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் மூத்த  தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவாக, ஒன்றிய முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத் தலைவர் தேர்த லில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, எதிர்க்கட்சி களின் கூட்டறிக்கை ஒன்றை காங்கி ரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.  “எதிர்வரும் குடியரசுத் தலை வர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிடச் செய்து மோடி தலை மையிலான அரசு மேலும் நாட்டிற்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று  நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹாவை பொது  வேட்பாளராக தேர்வு செய்துள் ளோம். அனைத்து அரசியல் கட்சி களும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யஷ்வந்த் சின்ஹாவுக்கு நாடு முழுவதும் ஆதரவு திரட்டும் வகை யில் குழு ஒன்றும் அமைக்கப்பட் டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்த லில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னணியில், இதுவரை திரிணா முல் காங்கிரசில் இணைந்து செயல்  பட்டு வந்த யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலன் கருதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகு வதாக அறிவித்துள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-இல் பிறந்த யஷ்வந்த் சின்ஹா அரசியல் அறிவியல் படிப்பில் முது நிலைப் பட்டம் பெற்றவர். சிறிது  காலம் பாட்னா பல்கலைக்கழ கத்தில் பணியாற்றிய அவர், அதன்  பின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்று ஆட்சிய ராக 1960-ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகாலம் பல்வேறு பதவி களை வகித்தார். குறிப்பாக, 1971-ஆம் ஆண்டு முதல் 1973 வரை ஜெர்மனிக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயல ராகவும் பின்னர் ஜெர்மனிக்கான இந்திய தூதரகத் தலைவராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1984-இல் போக்குவரத்து அமைச்ச கத்தில் கூடுதல் செயலராக பணி யாற்றிக்கொண்டிருந்தபோது பணியை ராஜிநாமா செய்துவிட்டு ஜனதா கட்சியில் இணைந்தார். 1986-இல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1988-இல் மாநி லங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன்

1989-இல் ஜனதாதளம் கட்சி உரு வானபோது அதன் பொதுச்செய லாளரானார். சந்திரசேகர் அமைச்ச ரவையில் 1990-91-இல் இந்தியா வின் நிதியமைச்சராக பணியாற்றி னார். பின்னர், 1996ல் பாஜகவில் இணைந்து தேசிய செய்தித் தொடர்பாளரான யஷ்வந்த் சின்ஹா பாஜக சார்பில் 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில்  ஹசாரிபாக் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்  தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலை மையிலான பாஜக அரசில் மார்ச் 1998-இல் நிதி அமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். பாஜகவுக்கு மோடி, அமித்ஷா தலைமையேற்றதற்குப் பின்னால், பாஜக கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட யஷ்வந்த் சின்ஹா அரசின் செயல்பாடுகளை கடுமை யாக விமர்சித்து வந்தார். 2021-இல்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்  தார். அவருக்கு அக்கட்சியில் துணைத் தலைவர் பொறுப்பும்  வழங்கப்பட்டது. இந்நிலையில் தான், தற்போது குடியரசுத் தலை வர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்  பொதுவேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவின் மனைவி நீலிமா சின்ஹா. இவர்  எழுத்தாளர் ஆவார். இவர்களுக்கு  ஷர்மிளா என்கிற மகளும் ஜெயந்த் சின்ஹா மற்றும் சுமந்த் சின்ஹா  ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.  ஜெயந்த் சின்ஹா பாஜகவின் மக்க ளவை உறுப்பினராக உள்ளார் என்  பது குறிப்பிடத்தக்கது.