சென்னை,டிச.16- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.18.80 கோடி யில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (டிச.16) திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிதாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கோபிசெட்டிப் பாளையத்தில் ரூ. 7 கோடியே 6 லட்சத்தி லும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் ரூ. 7 கோடியே 46 லட்சத்திலும் புதிதாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. தருமபுரியில் ரூ. 3 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான மகளிர் விடுதிக் கட்டடம்; சென்னை, அம்பத்தூரில் ரூ. 1 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்க ளுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்திற்கு புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.