tamilnadu

img

மதுரையில் மருத்துவ மாணவர் விடுதி திறப்பு

சென்னை, அக்.21- மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 288 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் மூன்று தளங்களுடன், ரூ. 12.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 144  அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக்  கட்டடம்; 174 இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் மூன்று தளங்க ளுடன், ரூ.8.60 கோடியில் கட்டப் பட்டுள்ள 174 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டிடம் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (அக்.21) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதேபோன்று, மருத்துவப் படிப்பு மாணவியர்கள் 204 பேர் தங்கும் வகையில் ரூ.9.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி பகுதி-1 கட்டிடம் மற்றும் 132 மருத்துவப் படிப்பு பயிலும் மாணவியர்கள் தங்கும்  வகையில் ரூ.9.12 கோடியில் கட்டப் பட்டுள்ள 44 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி பகுதி- 2 கட்டிடம்.  மேலும் மூன்று தளங்களுடன் ரூ.8.62 கோடியில்கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.48 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகி யோர் உடனிருந்தனர்.