சென்னை, ஏப். 9 - தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரு மான ஆர்.எம். வீரப்பன் எனப்படும் இராம. வீரப்பன்காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்ப னுக்கு செவ்வாயன்று (ஏப்.9) மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பல னளிக்காமல் அவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக் கோட்டை கிராமத்தில் பிறந்த ஆர்.எம். வீரப்பன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் உதவியாளராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் ஆவார். 1953-இல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், தனது பெயரில் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய சினிமா நிறு வனங்களைத் தொடங்கிய போது, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளரானார். 1963-ஆம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் ‘சத்யா மூவீஸ்’ எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்தார். 1972-இல் அதிமுக-வை எம்.ஜி.ஆர். துவங்கிய போது அவரது நிழலாக இருந்த ஆர்.எம். வீரப்பன், 1977 துவங்கி 1986 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்ட மேலவை உறுப்பினராகவும், அறநிலையங்கள் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்ச ராகவும்- அமைச்சரவையில் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். 1986-இல் திருநெல்வேலி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இருந்தாலும், பின்னர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டு, 1991-இல் காங்கேயம் தொகுதியில் வெற்றிபெற்று கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட அவர், ‘எம்ஜிஆர் கழகம்’ என்னும் அமைப்பைத் துவங்கி நடத்தி வந்தார். மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் அவர் மறையும் வரை மிக நெருக்கமான நட்பில் இருந்துவந்த ஆர்.எம். வீரப்பன், முதுமை காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையிலேயே, தனது 98-ஆவது வயதில் அவர் மறைந்துள்ளார். அவரது உடல் தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப் பட்டுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் புதனன்று (ஏப்ரல் 10) நடைபெறவுள்ள நிலையில், வீரப்பன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இரங்கல் அறிக்கையும் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.
சிபிஐ(எம்) இரங்கல்
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி யும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் அரசியல் துறையில் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்புத் துறையிலும் முத்திரைப் பதித்தவர். அதிமுக கட்சி உருவாவதற்கு முக்கிய பங்காற்றியவர். மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்ச ராகவும் பணியாற்றியவர். கம்பன் கழகம் மற்றும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவராகவும் திகழ்ந்தவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகை யில் கல்வி அறக்கட்டளையும் நடத்தி யவர். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.