உழைப்பாளர் தினமான மே நாளையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் அம்சங்கள்: உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோசலிச இயக்கத்தின் தலைவர்கள் 1889-ஆம் ஆண்டு கூடி மே 1-ஆம் நாளை தொழிலா ளர் வர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்திற் கான உலக நாளாக அறிவித்தார்கள். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர் களது முயற்சியால் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923-ஆம் ஆண்டு ‘மே நாள்’ முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் சோவியத் சென்று வந்த நம்மு டைய தந்தை பெரியார் அவர்களும் மே நாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள். அனைவரையும் “தோழர்” என்று அழைக்கச் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சி யின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடிஅரசு ஏட்டில் வெளியிட்டார்கள். தந்தை பெரியாரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் இணைந்து செயல்பட்டார்கள்.
சுயமரியாதை உணர்வையும் - சமதர்மச் சிந்தனையையும் இணைத்தே தமிழ்நாட்டில் இயக்கம் நடந்திருக்கிறது. அதன் விளைவாக திராவிட இயக்கத்தின் கருப்பு நிறத்தோடு சேர்ந்து சிவப்பும் நமது கொடிகளில் இடம் பெற்றுள்ளது. திராவிட இயக்க லட்சியங்கள் என்பது பொதுவுடைமைச் சிந்தனையால் நிறைந்தது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையே மேலோங்கி இருக்கும். நங்கவரம் விவசாயக் கூலித் தொழிலா ளர்களுக்காகப் போராடியவர்தான் நம்மு டைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு நன்றாக அறி யும். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட் டால் நான் ஒரு கம்யூனிஸ்டாக ஆகியிருப் பன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு வைத்த பெயரே ஸ்டாலின்.
உ.ரா.வரதராஜனின் கோரிக்கை
சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மறைந்த டபிள்யு.ஆர். வரத ராஜன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் ஒரு நினைவுச் சின்னம் சென்னை மாநகரத்தில் அமைத்திட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்தவுடனே, கலை ஞர் அவர்கள் சட்டமன்றத்தில் உட்கார்ந்தி ருக்கிறபோதே, அதை நிறைவேற்றித் தரு வோம் என்று முடிவு செய்து அறிவித்து, அறி வித்தது மட்டுமல்ல, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமைய வேண்டும் என்று தன்னுடைய கையாலேயே அதை வரைபடமாக வரைந்து சட்டமன்றத்திலே காட்டி அதற்குப் பிறகு அமைந்ததுதான் இந்த மே தின நினைவுச் சின்னம் என்பதையும் நான் உங்களுக்கு பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அது தான் நம்முடைய அடித்தளம்.
சட்டமுன்வடிவு ரத்து
தொழிலாளர் நலத் துறையின் சட்டமுன் வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதுமட்டுமல்ல, அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். அதிலும் குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது அனைத்து தொழிற்சாலை களுக்குமான சட்ட திருத்தம் அல்ல. மிகமிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அதுவும் நிபந்தனைகளுடன் மற் றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீல னைக்குப் பின்பே பணிநேரம் குறித்த விதி விலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத் தினுடைய திருத்தம். தொழிலாளர்களின் நல னைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற்சங் கத்தை சார்ந்தவர்களுக்கு அதில் சில சந்தே கங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப் பட்டது.
திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும்
திமுகவினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கி றேன். திராவிட முன்னேற்றக் கழகம் எத்த கைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இதன் மூலம் அது மெய்ப்பித்துக் காட்டப்பட்டி ருக்கிறது. இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடி யாக அனைத்து தொழிற்சங்கத் தோழர்களை யும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துக் களைக் கேட்டு – உடனடியாக எந்தவித தயக்கம் இன்றி, துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு.
பாஜக - அதிமுகவின் அராஜகம்
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததும் அதனை திரும்பப் பெறுவதற்காக ஓராண்டிற்கு மேலாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக உழவர்கள் தலைநகர் தில்லியில் போராடினார்கள். வெயிலில், மழையில், பனி இதுபோன்ற கொடுமையில் அவர்கள் போராடி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் போராடிய காரணம் உங்களுக்குத் தெரியும். அதனால் பலபேர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் உழவர்களின் போராட்டத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை வதை படக்கூடிய நிலையில் விட்டுவிட்டார்கள். அதேபோல, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து ஒரே இரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, அதில் மகிழ்ச்சியடைந்த வர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களைப் போராடவிட்டு ரசித்தவர்கள், தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், இவர்க ளுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடிய சில ஊட கங்களும் இதனை நமது அரசுக்கு எதி ராக மாற்றி விடலாம் என்று திட்டமிட்டு பிரச்சா ரத்தைப் பரப்பினார்கள். ஆனால், அவர்களு டைய தீய எண்ணங்களையெல்லாம் தொழி லாளத் தோழர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். தொழிற்சங்கத்தினரால் சந்தே கங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்த சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலா ளர் தோழன்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.
விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை, அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடிய வன். இதுகுறித்த தகவல் பேரவைச் செயல கத்திற்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப் பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறித்த செய்தி மாண்புமிகு பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும். எங்களைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் என்றைக்கும், யாரும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண் டும் - தொழிலாளர்களும் வாழ வேண்டும் என் பதுதான் நம்முடைய கொள்கை!