சேலம், மார்ச் 1- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4 ஆவது குற்றவியல் நீதிபதி பொன்பாண்டியை, அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் தாக்கினார். இதனால் காயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக பணிபுரிந்து வருபவர் பொன் பாண்டியன். இவர் மார்ச் 1 செவ்வாயன்று காலை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் இருந்து பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது ஊழியர் பிரகாஷ் என்பவர் தனது கையில் வைத்திருந்த கத்தி யைக் கொண்டு நீதிபதியை தாக்கியுள் ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி பொன்பாண்டியன் அலறினார். நீதிபதி அறைக்கு வெளியே இருந்த வழக்கறி ஞர்கள் விரைந்து வந்து, பிரகாஷை பிடித்து, உதைத்தனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறை யினர் பிரகாஷை கைது செய்தனர். மேலும், உடனே சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாவட்ட நீதிபதி குமரகுரு விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பிரகாசின் இடமாறு தலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன் தான் காரணம் என்றும், அவ்வப்போது தேவை யற்ற வேலை கொடுத்து, தொந்தரவு செய்து வந்ததால் கோபமடைந்து நீதிபதியை தாக்கியதாக கூறப்படுகிறது.