tamilnadu

img

நெருப்பாற்றில் நீந்திய இயக்கத்தின் போர்வாள் தீக்கதிர்: மதுக்கூர் ராமலிங்கம்

புதுச்சேரி, பிப். 27- நெருப்பாற்றில் நீந்திய இயக்கத்தின்  போர்வாள் தீக்கதிர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர்  மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்தார். தீக்கதிர் சந்தா அளிப்பு, அகில இந்திய மாநாட்டு தீர்மானம் அறிமுகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரதேச செயற்குழு உறுப்பினர் எம்.கலிய மூர்த்தி தலைமை தாங்கினார். பிரதேச  செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், வெ.பெருமாள், பிரதேச செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழ் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுக்கு மேல் கொரோனா பெருந்தொற்றால் மக்க ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிறுவன ங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர்களை எந்தவித முன் அறிவிப் பும் இன்றி ஆட்குறைப்பு செய்தனர்.

பொருளாதாரமே கடுமையாக பாதிக்க ப்பட்டு, தற்போதுதான் மீண்டு வரு கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் தீக்கதிர் வளர்ச்சியில் சிறிதளவு பின்ன டைவு ஏற்பாட்டு மீண்டும் பயணிக்க துவ ங்கியுள்ளது. அம்பானி, அதானிகளிடம் கையேந்தும் எத்தனையோ முதலாளித் துவ ஊடகங்களுக்கு மத்தியில் தீக்கதிர் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதற்கு காரணம் நெருப்பாற்றில் நீந்திய இயக் கத்தின் போர்வாளாக  அது இருப்ப தால் தான். எனவேதான் நாம் அன்றா டம் தீக்கதிரை வாசிக்க வேண்டும். புதுச் சேரி பிரதேசத்தில் அதன் எண்ணிக் கையை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அகில இந்திய மாநாடு அரசியல் நகல் தீர்மானத்தை மாநிலக்குழு உறுப் பினர் ஆறுமுக நயினார் முன்னதாக அறிமுகம் செய்து வைத்தார். ரூ.2.5லட்சம் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தா தொகை ரூ.2.5 லட்சத்தை  பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மதுக்கூர் ராமலிங்கத் ்திடம் வழங்கினார். பின்னர் தீக்கதிர் முகவர் பணியில் ஈடுபட்டுவரும் காசி நாதன், பாரி, சத்யா, மணவாளன் ஆகி யோரை மதுக்கூர் ராமலிங்கம் பாராட்டி னார்.