tamilnadu

img

பேருந்து நிலையத்தினுள் ஆக்கிரமிப்பு பயணிகள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அவதி

கோபி, நவ.22- கோபி பேருந்து நிலையத்தில் பயணி கள் காத்திருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மற்றும்  மாணவர்கள் நிற்பதற்குக்கூட இடமின்றி கடும் அவதியடைகின்றனர். ஈரோடுமாவட்டம் கோபி பேருந்து நிலை யத்தின் கிழக்கு பகுதியில் நகராட்சியின் சார் பில் ஆறு கடைகள் பொது ஏலத்தில்  விடப் பட்டது. அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுத்த வர்களிடம் கடை ஒப்படைக்கப்பட்டது. இத னையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்த கடையின் உரிமையாளர்கள், விதி களை மீறி கடையின் அளவை விட கூடுதல் இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கடை யின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் பய ணிகள் காத்திருக்கும் பகுதியினை ஆக்கிர மிப்பு செய்து, தகர சீட்டில் கூரை அமைத்துக் கொண்டனர். மேலும், தங்களது கடையுடன் இணைத்து பயணிகள் உள்ளே வரமுடியாத படி தடுப்பு ஏற்படுத்திக்கொண்டனர். இந்த  ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் பேருந் துக்காக காத்திருக்க இடவசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் நகராட்சி ஆணையாளரிடம் விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என கோரிக்கை மனுவினை அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததையடுத்து, தமிழக முதல்வரின்  கவ னத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் பேருந்து  நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார். இது  நடந்தது 2023 ஆண்டு நவம்பர் மாதம். அப் போது, மூன்று நாட்களுக்குள்  அகற்றிட நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும், அகற்ற  தவறினால் நகராட்சியினர் ஆக்கிரமிப்பை  அகற்ற கூடும் என உறுதியளித்தார். ஆனால், தற்போது 2024 நவம்பர் மாதம் கடக்க உள்ள  நிலையிலும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு வருடமாகியும் பேருந்து நிலை யத்தில்  வணிக வளாகக் கடைகள் முன் பகுதி யிலும் பின் பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்றபடமால் உள்ளது.  இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள், பள்ளி கல் லூரி மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி  வருகின்றனர் எனவே எதிர்  வரும்  பண் டிகை மற்றும், விசேச நாட்களிலும் தேர்வு சம யங்களில் மாணவ மாணவிகளும் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வரும் வரை பாதுகாப்பாக காத்திருக்க  வணிக வாளக கடைகள் முன்பு ஏற்படுத்தியுள்ள ஆக்கிர மிப்பை அகற்றி இருசக்கர வாகனங்களை பேருந்து நிலையத்திற்கு வெளியே நிறுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.