tamilnadu

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக முகவர் பணியை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு

சென்னை, ஜூலை 21- வங்கி வணிக தொடர்பாளர்கள் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) வணிக  தொடர்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  3,500க்கும் மேற்பட்டோர் வணிக முகவர்களாக பணியாற்றி வருகின்ற னர். ஒவ்வொரு முகவருக்கும் 6 கிரா மங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் முதியோர், விதவை ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது. வராக் கடன் வசூல் செய்வது, டெபாசிட் சேர்ப்பது, ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு துவக்குவது.  ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு, 330 ரூபாய் காப்பீட்டு,  12 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் திட்டம்   சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு  சேவை பணிகளுக்காக கிராமப்புறங்களுக்கு தினசரி தனது சொந்த வாகனத்தில் 70 கிலோ மீட்டர் வரை சென்று 10 மணி நேரத்திற்கும் மேல் உழைக்கி றார்கள். குறைந்தபட்சம் 150 பரிவர்த் தனைகளை மேற் கொண்டால்தான் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படு கிறது. சராசரி மாத வருமானம் ரூ. 8 ஆயிரம்தான் கிடைக்கும்.

ழுவதும் ‘இண்டக்ரா’என்ற கார்ப் பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஐஓபி நிர்வாகம் முயற்சி செய்து  வருகிறது. இதனால் தற்போது கிடைக்கும் குறைந்த வருமானமும்  பணி பாதுகாப்பும் கேள்விக்குறி யாகும். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னை தொழிலாளர் நல ஆணையரிடம் தொழில் தாவா ஒன்றையும் எழுப்பி  இருக்கிறார்கள். ஆனால், வங்கி  நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக  ஒரு மாதத்திற்குள் பணியிலிருந்து நீக்குகிறோம் என நோட்டீஸ் வழங்கி யுள்ளது. இந்த அத்துமீறலை எதிர்த் தும் தொழிலாளர் நல ஆணையரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்து டன் இணைக்கப்பட்ட வணிக தொடர் பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வியாழனன்று (ஜூலை 21) நடைபெற்றது.

தலைவர் எஸ்.தீனதயாளன் தலைமை தாங்கினார். இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தில் மாநிலச் செயலாளர் என்.ராஜகோபால் துவக்கி வைத்தும், மாநிலத் தலைவர் தமிழரசு முடித்து வைத்தும் செய்து பேசினர். அகில இந்திய செயலாளர் கே.கே.கிருஷ்ணன், இணைச் செய லாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் சண்முகம், எஸ்.வி.வேணு கோபால், விவேகானந்தன், வணிக தொடர்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் த.பழனிசாமி, நிர்வாகிகள் லட்சுமி மாரியம்மா, சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் செல்வி,  பாலகிருஷ்ணன் (பொது காப்பீட்டு  ஊழியர் சங்கம்), ராஜூ (பிஎஸ்என் எல்) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, “ ஒரு பொதுத்துறை நிறுவனம் சட்டப்படி நடக்க வேண்டும். ஆனால் ஐஓபி நிர்வாகம் அப்படி நடந்து கொள்ளவில்லை. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் சட்ட ரீதியான போராட்டத்தையும் நடத்துவோம் என்றும் இடதுசாரி தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களையும் அணி திரட்டி நீதி கிடைக்கும் வரை போராடு வோம் என்றும் தலைவர்கள் எச்சரிக்கை செய்தனர்.